ஐபிஎல் ஒளிபரப்பு உரிமையை மீண்டும் கைப்பற்றியது சோனி மேக்ஸ் நிறுவனம்!
நேற்று நடைபெற்ற முதல் நாள் ஐபிஎல் ஒளிபரப்பு ஏலத்தில், 43 ஆயிரம் கோடி வரையிலும் ஏலம் கேட்கப்பட்ட நிலையில் இன்று 50 ஆயிரம் கோடிக்கும் மேல் ஏலம் எடுத்து சோனி நிறுவனம் ஒளிபரப்பை கைப்பற்றியதாக தெரிகிறது.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் ஒளிபரப்பு காலம் முடிவடைந்த நிலையில், 2023-27 கால ஆண்டுக்கான ஒளிபரப்பு ஏலத்தை ஐபிஎல் நிறுவனம் அறிவித்து இருந்தது. நேற்று முதல் நாள் ஏலத்தில் 43 ஆயிரம் கோடி வரையிலும் ஏலம் கேட்கப்பட்ட நிலையில் ஏலத்தின் கடைசி நாளான இன்று 50 ஆயிரம் கோடிக்கும் மேல் கேட்டு ஒளிபரப்பு உரிமையை சோனி மேக்ஸ் நிறுவனம் கைப்பற்றியதாக தெரிகிறது.
“ முன்னதாக 10 ஆண்டுகளுக்குமே ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 16,347 கோடி தான் ஐபிஎல் ஒளிபரப்பிற்கு கட்டணம் செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த வருடம் ஐந்து வருடத்திற்கான ஏல தொகையே ஐம்பதாயிரத்தை தாண்டி இருக்கிறது “