ஐபிஎல் 2021 | இன்றைய திரில்லரில் பெங்களுரு அணியை வென்றது ஹைதராபாத்!
IPL 2021 52th Match SRH Win Against RCB
ஐபிஎல் 2021-இன் 52 ஆவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.
முதலில் ஆடிய ஹைதராபாத் அணி வழக்கம் போல ஸ்லோ இன்னிங்ஸ். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 141 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஹைதராபாத் சார்பில் ராய் அதிகபட்சமாக 44(38) ரன்கள் எடுத்தார். அதற்கு பின் ஆடிய பெங்களுரு அணியில் கடைசி பந்து வரை டிவில்லியர்ஸ் நின்ற போதும் நான்கு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
ஹைதராபாத் அணியின் மிகப்பெரிய பலமே எத்தகைய குறைந்த ஸ்கோர் அடித்திருந்தாலும் அதற்குள் எதிரணியினரை டிபென்ட் செய்து விடும். அவ்வாறே இன்று தன் பலத்தை பெங்களுரு அணியிடம் காண்பித்திருக்கிறது. இது ரொம்பவே லேட் என்றாலும் மிச்சமிருக்கும் போட்டியிலும் இதே பாணியில் ஆடினால் அது ஹைதராபாத் ரசிகர்களை ஓரளவுக்கு திருப்திப் படுத்தும்.
“ கடைசியாக ஒரு திரில்லர் வெற்றியை ருசித்திருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. தோல்வியைத் தழுவி இருந்தாலும் தொடர்ந்து மூன்றாவது இடத்திலேயே நீடிக்கிறது பெங்களுரு அணி. இனி முதல் இரண்டு இடங்களுக்கான போட்டி சென்னைக்கும் டெல்லிக்கும் மட்டும் தான் “
About Author
Auto Amazon Links: No products found.