கோவையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட 15 வயது சிறுமி!

15 Year Old Girl Child Karthika Killed Near Coimbatore

15 Year Old Girl Child Karthika Killed Near Coimbatore

காணாமல் போனவராக கருதப்பட்ட கோவை சரவணம்பட்டியைச் சேர்ந்த கார்த்திகா என்ற 15 வயது சிறுமி முட்புதரில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டு இருக்கிறார்.

கோவையில் பத்தாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி கார்த்திகா டிசம்பர் 11 அன்று வீடு திரும்பவில்லை என வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று முட்புதரில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக மீட்கப்பட்டு இருப்பது தமிழகத்தில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

“ தொடர்ந்து சிறுமிகள் கொல்லப்படுவது, வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவது போன்ற குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. கடுமையான நடவடிக்கைகள் இது போன்ற குற்றங்களுக்கு தேவை என்பதே அனைத்து தரப்பினரும் ஒருமனதாய் Justice For Karthika என்ற ஹேஸ்டாக்கோடு இணையத்தில் வலியுறுத்தி வருகின்றனர் “

About Author