நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்கள் நவம்பர் 19-இல் நடைபெற இருப்பதால் அன்றைக்கு உரிய தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறது.
தமிழக அரசு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நவம்பர் 19 அன்று நடத்த இருப்பதால், அண்ணா பல்கலைக்கழகம் அன்று நடக்கவிருக்கும் பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வுகளை மார்ச் மாதம் 5,6,9,11 ஆகிய தேதிகளுக்கு ஒத்தி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது.
“ கொரோனா இன்னமும் கட்டுக்குள் வராத காரணத்தால் பெரும்பாலான பல்கலைகழக தேர்வுகள் இன்னமும் ஆன்லைனிலேயே நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது “