கொரோனா நிலவரம் | தமிழகம் | ‘கடந்த 24 மணி நேரத்தில் 12,895 புதிய தொற்றுகள் உறுதி’
Corona Updates In TamilNadu 10 01 2022
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12,895 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தமிழகத்தில் 12,895 புதிய தொற்றுகள் பதிவாகி இருக்கிறது. மேலும் நேற்று ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு 12 பேர் பலியாகி இருக்கின்றனர். இதில் சென்னையில் மட்டும் 6,186 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. தற்போது 51,335 பேர் சிகிச்சையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ பூஸ்டர் டோஸ், சிறார்களுக்கு தடுப்பூசி, ஞாயிறு ஊரடங்கு என்று படிப்படியாக கொரோனாவிற்கு எதிராக தமிழகம் போராடி வரும் நிலையில், ஒரு பக்கம் தொற்றின் எண்ணிக்கையும் படிப்படியாக உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது “