தமிழகத்தில் வெகுவாக குறைந்து வரும் புதிய கொரோனோ தொற்று!
Corono Updates In TamilNadu 09 10 2021
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,344 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று மட்டும் தமிழகத்தில் கொரோனோ தொற்றுக்கு 14 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை தமிழகத்தில் 35,768 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,457 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தமிழகத்தை பொறுத்த வரை புதிய பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. மீட்பு விகிதமும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 5 கோடி என்ற இமாலய இலக்கை எட்டி இருக்கிறது.
“ மூன்றாவது அலையை தவிர்க்க வேண்டுமெனில் தற்போது தனி ஒவ்வொருவரும் கடைப்பிடித்து வரும் அதே கொரோனோ கட்டுப்பாட்டு முறைகளை இன்னும் கொஞ்ச காலத்திற்கு கடைப்பிடிக்க வேண்டும் அவ்வளவு தான். முகக்கவசத்தை முறையாக அணிந்திடுங்கள். முடிந்த அளவுக்கு தடுப்பூசி எடுத்துக் கொள்ளுங்கள். “