தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,245 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In TamilNadu 15 10 2021
இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,245 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 16 பேர் கொரோனோ தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலியானது தமிழகத்தில் 35,869 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,442 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் தமிழகத்தில் தடுப்பூசி உபயோகமும் 5.25 கோடியை எட்டியுள்ளது. ஒட்டு மொத்த தேசத்திலும் தடுப்பூசி உபயோகம் 97 கோடியைக் கடந்து இருக்கிறது.
” மூன்றாவது அலை குறித்த அறிக்கைகள் அவ்வப்போது வந்து கொண்டு இருந்தாலும், அதை நோக்கிய தடுப்பு செயல்பாடுகளிலும் தேசம் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருக்கிறது. நாமும் நம்மால் முடிந்த பங்கினை இந்த தடுப்பு நடவடிக்கைகளில் ஆற்றிடுவோம் “