கொரோனோ நிலவரம் | தமிழகத்தில் இன்று மட்டும் 1,090 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!
Corono Updates In TamilNadu 26 10 2021
தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 1,090 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்றைய தினத்தில் மட்டும் தமிழகத்தில் 15 பேர் தொற்றுக்கு பலியாகி இருக்கின்றனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 36,048 ஆக உயர்ந்து இருக்கிறது.
இது போக இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 1,326 பேர் தொற்றில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். தடுப்பூசி உபயோகமும் தமிழகத்தில் 5.62 கோடியாக உயர்ந்து இருக்கிறது. ஒட்டு மொத்த தேசத்தில் தடுப்பூசி உபயோகம் 103 கோடியை தாண்டி இருக்கிறது. இந்தியாவில் 100 பேருக்கு தலா 77 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்ள தானாகவே முன்வருகின்றனர்.
“ ஒரு பக்கம் வெகுவாக கொரோனோ தொற்று குறைந்து வந்தாலும், சீனா,ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனோ உலகளாவிய அளவில் மீண்டும் அச்சுறுத்தலைத் தான் தருகிறது “