மாண்டஸ் புயலின் தாக்கம், 8 மாவட்டங்களுக்கு அதீத கனமழை எச்சரிக்கை!

Heavy Rain Alert For 8 Districts In TN Idamporul

Heavy Rain Alert For 8 Districts In TN Idamporul

மாண்டஸ் புயலின் தாக்கத்தால் இன்று 8 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வுமையம் எச்சரித்து இருக்கிறது.

மாண்டஸ் புயலின் தாக்கத்தால், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் இன்று 12-20 செ.மீ அளவிற்கு அதீத கனமழை பெய்யக்கூடும் என்பதால் பேரிடர் மேலாண்மை குழுக்களை தயார்நிலையில் வைக்க சொல்லி தமிழக அரசுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.

“ சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு இருக்கிறது எனவும் வானிலை ஆய்வுமையம் அறிக்கை விடுத்து இருக்கிறது “

About Author