’நீயா நானா’ தோசை பிரபலம், பிரணவ் ரெயிலில் அடிபட்டு பலி!

Neeya Naana Trending Dosai Man Died In Train Accident Idamporul

Neeya Naana Trending Dosai Man Died In Train Accident Idamporul

’நீயா நானா’ எபிசோடில் தனது அம்மாவின் தோசை டாப்பிக்கால் பிரபலமான பிரணவ் அவர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்றில் அடிபட்டு பலியாகி இருக்கிறார்.

‘நீயா நானா’ எபிசோடு ஒன்றில் ’தனது மகன் 20-25 தோசைகள் சாப்பிடுவான், சலிக்காமல் சுட்டுக் கொடுப்பேன்’ என ஒரு அம்மா கூறவே, அந்த தோசை டாப்பிக்கும் அந்த வீடியோவும் இணையமெங்கும் வைரலானது. கடைசியாக வைரலான அந்த அம்மாவையும், அவரின் மகனான பிரணவ் அவர்களையும் பல தனியார் மீடியாக்கள் பேட்டி எல்லாம் எடுத்து இருந்தனர்.

இந்த நிலையில் தான் தான் ஒரு அதிர்ச்சிகர சம்பவம் ஒன்று அந்த குடும்பத்தை துளைத்து இருக்கிறது. தனியார் தொழில்நுட்ப கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வரும் பிரணவ் (21) அவர்களும் அவரது ரூம் மேட் சதீஷ் (41) அவர்களும் பணி முடிந்து எலக்ட்ரிக் ரயிலில் இருந்து இறங்கி தண்டவாளத்தை கடக்க முற்பட்டு இருக்கின்றனர்.

அந்த சமயத்தில் தான் கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று அந்த தண்டவாளத்தில் அதிவேகமாக வந்து கொண்டு இருந்திருக்கிறது. இருவரும் கவனக்குறைவால் தண்டவாளத்தின் நடுவில் நிற்க, இருவரின் மீதும் ரெயில் மோதி, சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டு அந்த இடத்திலேயே பலியாகி இருக்கின்றனர். ஒரிரு மாதங்களுக்கு முன் யார் அந்த தோசை மேன் என நாம் பார்க்க முற்பட்ட அந்த பிரணவ் தற்போது இல்லை என்பதை இணையவாசிகளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

ஒரு சிலர் தோசை விடயத்தை அவர் அம்மா பொதுவெளியில் பகிர்ந்ததால் பலர் கண்பட்டு இருக்கும், அதனால் அவர் இறந்திருக்க கூடும் என ஒரு தேவையில்லா கருத்துக்களை கண்டண்டுகளாக எடுத்து பகிர்ந்து வருகின்றனர். தண்டவாளங்களை கடக்கும் போது கவனமாக கடக்க வேண்டும், அங்கு யார் கவனமற்று இருந்தாலும் இந்த விபத்து நேர்ந்து இருக்கும் என்பது தான் உண்மை.

“ அவன் 30 கேட்கட்டுமே ஊத்திக் கொடுப்பேன் என சொன்ன அந்த தாயின் நிலையை யோசிக்கும் போது தான் வலி மெல்ல இதயத்திற்குள் ஊடுருவிகிறது. இழந்ததை மீட்க முடியாது, வலிமையுடன் அவர்கள் இருக்க வேண்டும் அவ்வளவு தான் “

About Author