அரசு பள்ளிக்கு நிதியாக ரூபாய் 1 லட்சம் கொடுத்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாளுக்கு மோடி பாராட்டு!

Tamilnadu Thayammal Get Greetings From Modi In Man Ki Bhaat

Tamilnadu Thayammal Get Greetings From Modi In Man Ki Bhaat

பிரதமர் மோடி அவரது மன்கீ பாத் உரையாடலில், அரசு பள்ளிக்கு நிதியாய் ரூபாய் 1 லட்சம் கொடுத்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாள் அவர்களை பாராட்டி பேசி இருக்கிறார்.

உடுமலையைச் சேர்ந்த இளநீர் விற்பனையாளர் தாயம்மாள் அவர்கள் தான் சிறுக சிறுக சேமித்த ரூபாய் 1 லட்சத்தை, அரசு பள்ளிக்கு நிதியாய் கொடுத்து இருந்தார். கல்விக்காக அவர் செய்த அந்த உன்னதத்தை , பிரதமர் மோடி அவர்கள் அவரது மன்கீ பாத் உரையாடலில் கூறி பெருமிதம் கொண்டார்.

“ தன்னால் அனுபவிக்க முடியாத கல்வியை, பிறர் அனுபவிக்கட்டுமே என்று ஒருவர் செய்யும் தொண்டு, நிச்சயம் பாராட்டுதலுக்குரிய போற்றுதலுக்குரிய ஒரு விடயமே “

About Author