Tamizhum Saraswathiyum Today Episode | 21.12.2022 | Vijaytv
tamizhum Saraswathiyum. 21.12.2022
தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் சாப்பிடாமல் வேலை செய்வதை பார்த்து கோவம் கொண்டார் சரஸ்வதி. மேலும் இந்த வேலையை உடனே நீங்களே செய்ய வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை என்று நொந்து கொண்டார். அதே நேரம் கோதை மற்றும் நடேசன் இருவரும் கம்பேனிக்கு ஒரு வேலையாக வந்தார்கள். அப்போது தமிழ் சாப்பிடாமல் அப்படியே வைத்து விட்டு சென்று இருப்பதை பார்த்த கோதை கோவத்தில் கத்தினார். அடுத்து தமிழ் வேலையை முடித்து விட்டாரா என்று அர்ஜுன் கேட்பது போல் அவரை மரியாதை இல்லாமல் பேசினார். இந்த வேலை முடிந்து விட்டால் என்னிடம் சொல்லி இருக்க வேண்டும் என்று அதிகார தோரணையில் பேசினார். இதனால் சரஸ்வதி கோவத்தில் கத்தினார். எப்படி உங்களை கேள்வி கேட்கலாம்? நீங்களும் இந்த கம்பேனிக்கு ஒரு முதலாளி என்று மதில் வைத்து நடந்தது கொள்ளுமாறு கூறினார். அந்த நேரம் கோதை அங்கு சரஸ்வதி பேசுவதை கேட்டுக்கொண்டு இருந்தார். பின் தமிழ் இடம், இனி சாப்பாடு சாப்பிடாமல் வேலை செய்வது நடக்கவே கூடாது என்று கண்டித்தார். பின் வீட்டுக்கு வந்ததும் வீட்டில் அனைவரையும் கோதை அழைத்தார். பின் தமிழ் இது வரை தொழிலாளர்களோடு வேலை செய்வது போல் இனி செய்ய வேண்டாம் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…