இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடியால் அங்கிருக்கும் மக்கள் வெளிநாடுகளுக்கு தப்பி ஓட முயல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடும் பொருளாதார நெருக்கடியை தாக்கு பிடிக்க முடியாமல், இலங்கை வாழ் மக்கள் மீன்பிடி படகுகள் மூலம் அருகில் இருக்கும் நாடுகளுக்கு கடல்வழி மார்க்கமாக உயிரை பணயம் வைத்து பயணம் செய்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஒரே வாரத்தில் இதுவரை நான்கு படகுகள் பிடிபட்டு இருப்பதாக கூடுதல் தகவல்.
“ ஒரு நாட்டின் தலைமை சரியாக இருந்தால் அது எத்தகைய நெருக்கடியில் இருந்தும் மீண்டுவிடும். அத்தகைய தலைமை இலங்கையில் இல்லை, அதனால் தான் இலங்கையில் இப்படி ஒரு திண்டாட்டம் “