ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் செய்யும் ஆட்சி ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது!

1 Year Of Taliban In Afghan

தலிபான்களின் ஆட்சி நேற்றோடு ஆப்கானிஸ்தானில் ஒரு வருடத்தை நிறைவு செய்கிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் படைகள் புகுந்து ஆட்சியாளர்களை அகற்றி தங்களுடைய அரசை ஏற்படுத்தினர். ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்து இருக்கும் தலிபான்கள் நேற்று பிரம்மாண்ட பேரணியை ஏற்படுத்தினர். அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே ‘அமெரிக்காவிற்கு மரணம்’ என்ற கோஷத்தையும் எழுப்பினர். “ அமெரிக்கர்கள் நினைத்து இருந்தால் ஆட்சியை தலிபான்கள் வசம் செல்வதை தடுத்து இருக்கலாம், செய்யவில்லை, இன்று ஆப்கானிஸ்தான் அதள பாதாளத்திற்குள் சென்று கொண்டு இருக்கிறது “

ஆப்கனில் உள்ள ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் கூடாரங்களை தாக்கிய அமெரிக்க ட்ரோன்கள்!

காபூல் விமான நிலையத்தில் ஐ எஸ் தீவிரவாத அமைப்புகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க கடற்படை வீரர்கள் உட்பட 100க்கு மேற்பட்டோர் பலியான நிலையில் அதற்கு அமெரிக்கா பதிலடி கொடுத்துள்ளது. ஆளில்லா ட்ரோன்கள் மூலம் ஆப்கனில் உள்ள ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் கூடாரங்களின் மீது வான்வழி தாக்குதல்களை பொழிந்தது. அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதலில் ஐ எஸ் பயங்கரவாத அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தகவல் தெரிவித்து வருகின்றன. இது குறித்து … Read more

காபூலில் தற்கொலைப்படை தாக்குதல்: 72 பேர் பலி,140-க்கும் மேற்பட்டோர் படுகாயம்

ஆப்கானிஸ்தானின் தலைநகராக அறியப்படும் காபூல் விமான நிலையம் அருகே அடுத்தடுத்து நடத்தப்பட்ட இரண்டு தற்கொலைப்படை தாக்குதல்களில், அமெரிக்க கப்பற்படை வீரர்கள் 12 பேர் உட்பட 72 பேர் பலியாகி உள்ளதாக ஊடகங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. அது மட்டுமில்லாது 140-க்கும் மேற்பட்டோர் இந்த குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பலி எண்ணிக்கை மேலும் உயரவும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளன. தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து தொடர்ந்து அங்கு இருக்க விருப்பமில்லாத மக்களும் அங்குள்ள அமெரிக்கர்களும் காபூல் விமான நிலையம் … Read more

20 பேருக்கும் மேலானவர்களை காவு வாங்கிய ஆப்கானிஸ்தான் விமான நிலையம்

அமெரிக்க படைகள் வெளியேறிய ஒரு வாரத்தில் தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றி விட்டனர். அதிபர் அஸ்ரப் கனியும் நாட்டை விட்டு வெளியேறிய நிலையில் மக்களும் தொடர்ந்து ஆப்கனை விட்டு வெளியேறும் நோக்கோடு விமான நிலையத்திலேயே தங்கி போராடி வருகின்றனர். உயிரை கையில் பிடித்துக்கொண்டு எப்படியாவது நாட்டை விட்டு வெளியேறியாக வேண்டும் என்ற நோக்கோடு விமான நிலையத்தின் நெரிசல்களிலும், பாதுகாப்பின்றி விமானத்தின் இறக்கைகளிலும் இதர பாகங்களிலும் அமர்ந்து கொண்டு பாதுகாப்பின்றி பயணம் செய்தவர்கள் என்று 20-க்கும் மேற்பட்டவர்களை காவு … Read more

சிறுபான்மை இனத்தவர்களை சித்ரவதைக்கு உள்ளாக்கும் தலிபான்கள்!

அமெரிக்க படைகள் வெளியேறிய ஏழு நாட்களுக்குள் தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில், ஆப்கானிஸ்தானின் முண்டாரக்ட் மாகாணத்தை தலிபான்கள் கைப்பற்றிய போது ஷியா பிரிவைச் சேர்ந்த சிறுபான்மையினர் 9 பேரை படுகொலை செய்திருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. கடந்த 2001-இல் அல்கொய்தா அமைப்பு இரட்டை கோபுர தாக்குதலை அமெரிக்காவில் நிகழ்த்தி இருந்திருந்தது. அன்றைய தலிபான்கள் அதை ஆதரித்தும் அல்கொய்தா அமைப்பின் தலைவர் பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்தும் வந்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா தலிபான்கள் … Read more