இந்தியாவையும் வந்தடைந்ததா வேகமாக பரவக் கூடிய புதிய வகை ஒமிக்ரான் தொற்று?

Coronavirus New Variant Omicron Spreading All Over The World

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை ஒமிக்ரான் தொற்று இந்தியாவையும் வந்தடைந்து இருக்கிறதா என்ற அச்சம் தேசத்தில் கிளம்பி இருக்கிறது. கடந்த நவம்பர் 1 முதல் 26 வரை 95 பயணிகள் தென் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா வந்தடைந்து இருக்கின்றனர். அவர்களிடம் நடத்திய பரிசோதனையில் கர்நாடகாவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. அது ஒமிக்ரான் வகை தொற்றாக இருக்குமோ என்ற பீதியில் அரசு விழி பிதுங்கி நிற்கிறது. இந்த நிலையில் அந்த இருவரும் … Read more

கொரோனோ மூன்றாவது அலையை இந்தியாவில் டிசம்பருக்குள் எதிர்பார்க்கலாம் – மருத்துவ வல்லுநர்கள்!

Corono Third Wave In India Will Be Start In Between October To November

இந்தியாவில் மூன்றாவது அலையை அக்டோபர் முதல் டிசம்பர் இந்த காலக்கட்டத்திற்குள் எதிர்பார்க்கலாம் என்று இந்திய மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். தேசத்தில் மூன்றாவது அலையை மக்கள் நெருங்கும் கட்டத்தில் இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இனி வரும் அக்டோபர் முதல் டிசம்பர் காலக்கட்டம் இந்த மூன்றாவது அலையை உறுதி செய்யக்கூடும் எனவும் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். குழந்தைகள், தடுப்பூசி போட்டவர்கள் என்று அனைவரையும் தாக்கும் வல்லமை பெற்றதாக இந்த மூன்றாவது அலை … Read more

உயர்ந்து வரும் உலகளாவிய கொரோனோ தொற்று!

Corono Updates In World 22 09 2021

2019-இல் ஆரம்பித்த கொரோனோ அலை இன்றளவும் ஓயாத நிலையில், உலகளாவிய அளவில் மீண்டும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது கொரோனோ தொற்று! கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் உலகளாவிய அளவில் 3,87,435 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் உலகளாவிய அளவில் 7,324 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த உலகளாவிய கொரோனோ பலி எண்ணிக்கை 47 லட்சத்தை கடந்துள்ளது. “ வளர்ந்த நாடாக கருதப்படும் அமெரிக்கா … Read more

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 43,263 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 43,263 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த ஒரு நாளில் மட்டும் 338 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 4,41,749 -ஆக உயர்ந்துள்ளது. இது போக நேற்றைய ஒரே நாளில் 40,567 பேர் தொற்றிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தொற்று எண்ணிக்கையை பொறுத்தவரை நேற்றைய எண்ணிக்கையை விட இன்று சற்று உயர்ந்தே உள்ளது. … Read more

200 கோடி தடுப்பூசியை செலுத்தி புதிய சாதனை புரிந்திருக்கும் சீனா!

கொரோனோ முதன் முதல் கண்டறியப்பட்ட நாடான சீனாவில் கொரோனோ பரவலுக்கு எதிராக 200 கோடி தடுப்பூசிகள் உபயோகிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனோ பரவலுக்கு எதிராக உலக நாடுகள் தொடர்ந்து போராடி வரும் நிலையில், அத்தொற்று முதன் முதலில் கண்டறியப்பட்ட சீனாவும் இதற்கு விதிவிலக்கல்ல. கிட்ட தட்ட 140 கோடி இருக்கும் சீன மக்கள் தொகையினுள் 89 கோடி பேருக்கு இரண்டு தவணையாகவும் தடுப்பூசி செலுத்தியுள்ளது சீனா அரசு. அது மட்டுமில்லாது 200 கோடிக்கும் மேல் தடுப்பூசியை … Read more

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 46,805 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் இந்தியாவில் புதியதாக கொரோனோ தொற்றிற்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 46,805-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 514-ஆக உள்ளது. இதன் மூலம் இந்தியாவில் ஒட்டு மொத்த கொரோனோ பலி 4,37,403-ஆக அதிகரித்துள்ளது. நேற்றைய ஒரு நாளில் தொற்று குணமாகி வெளியோனோரின் எண்ணிக்கை 31,341-ஆக உள்ளது. இந்தியாவில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களின் எண்ணிக்கை 62 கோடியைக் கடந்துள்ளது. தேசத்தில் 100 பேருக்கு தலா 45.34 பேர் தடுப்பூசி எடுத்துக்கொள்கின்றனர். தொடர்ந்து … Read more

கேரளத்தில் ஒரே நாளில் 31,445 பேருக்கு கொரோனோ தொற்று

கேரளத்தில் தொடர்ந்து உயர்ந்து வந்த கொரோனோ தொற்று இன்று புதிய உயரத்தை தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 30,000-க்கும் அதிகமான பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளத்தில் இன்று ஒரே நாளில் 31,445 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் மட்டும் 215 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதன் மூலம் ஒட்டு மொத்த கொரோனோ பலி கேரளாவில் 19,972-ஆக உயர்ந்துள்ளது. நோய் தொற்று உறுதி செய்யப்படும் விகிதமும் 19.03 … Read more