பாண்டியன் ஸ்டோர்ஸ் புது promo – 24.08.2021

பாண்டியன் ஸ்டோர்சின் புது புரோமோவில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் தனது வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கும்பொழுது, தனம் மூர்த்தியை பார்க்கிறார்கள். பின்னர், தனம் மூர்த்திக்கு தெரிந்தே கண்ணனுக்குத் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை சாமான்களை அனுப்பி வைக்கிறார். அதை பார்த்து கண்ணன் நெகிழ்ச்சி அடைகிறார். இந்த விஷயம் தெரியவந்தால் பிரச்சனை ஆகுமா ஆகாதா மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்று 19.08.2021

பாண்டியன் ஸ்டோர்சில் இன்று ஒரு பக்கம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் திட்டு வாங்கிக் கொண்டு முருகன் பார்வதி வீட்டில் சாப்பிடுகின்றனர். இன்னொரு பக்கம் முல்லை தனத்திடம் தன் வீட்டில் தான் அவர்கள் இருவரும் இருக்கிறார்கள் என்று கூறுகின்றார். குடும்பத்தினர் எவ்வளவு முயற்சி செய்தாலும் கண்ணனை மறக்க முடியாமல் தவிக்கின்றனர். முல்லை கதிரிடம் நடந்ததை கூறுகிறார். ஜீவாவும் கதிரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது லக்ஷ்மி அம்மா கண்ணனை தூக்கத்தில் தேடுகிறார்.