ராஜா ராணியில் இன்று – 19.08.2021

பார்வதி சரவணனிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட அதற்கு பிறகு சரவணன் அந்த பாஸ்கரின் வீட்டிற்கு செல்கிறார். அர்ச்சனா எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று பாஸ்கர் வீட்டுக்கு செல்கிறார். ஆனால் எதுவும் முடியவில்லை வீட்டிற்கு வந்த சரவணன் சிவகாமியை மனம் மாற்றி அவரும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.

நாம் இருவர் நமக்கு இருவர் இன்று – 19.08.2021

மாறனும் மாயனும் மாறி மாறி அன்பை பரிமாறி கொள்ள, வழக்கறிஞர் வீட்டுக்கு வருகிறார். உயிலை சரி பார்த்த அவர் ராஜரத்தினம் எழுதிய படி, மாறனுக்கே 55% சொத்து என மாசாணி, வடிவுக்கு அதிர்ச்சி தருகிறார். பின்னர், மாறனும் மாயனும் அவர்கள் தாய் சாரதாவை பற்றி பேசுகின்றனர்.