தமிழகத்தில் ஞாயிற்றுக் கிழமை மட்டும் முழு நேர ஊரடங்கு அமல் – சுகாதாரத்துறை

TamilNadu Government Announce Sunday Lockdown

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை விடுத்து இருக்கிறது. கொரோனா பரவல் அதிகரிப்பதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து இருக்கிறது. இது போக மாநிலமெங்கும் கல்லூரிகளுக்கு ஜனவரி 20 வரை விடுப்பு விட இருப்பதாகவும் தமிழக அரசு அறிக்கை விடுத்து இருக்கிறது. “ இது போக ஒன்று முதல் ஒன்பது வரையிலான பள்ளி வகுப்புகளுக்கு மீண்டும் ஆன்லைன் … Read more

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று, தமிழகத்தில் அமல் ஆகிறதா இரவு நேர ஊரடங்கு?

TamilNadu Government Announce Night LockDown Health Department

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றின் வடிவமான ஒமிக்ரானால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தில் ஒமிக்ரான் தொற்று 121 ஆக உயர்ந்து இருக்கிறது. இது போக தேசம் முழுக்க கொரோனா தொற்றும் மீண்டும் பன்மடங்காக உயர்ந்து வருவதால் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த சுகாதாரத்துறை தமிழக அரசிடம் கோரிக்கை விடுத்து இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. “ தேசத்தில் ஆங்காங்கே பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு … Read more

தமிழகத்தில் தொடங்கியது மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம்!

Third Mega Vaccination In TamilNadu Starts Today

தமிழகத்தில் முதல் இரண்டு மெகா தடுப்பூசி முகாம்கள் மக்களிடையே பெரிதும் வரவேற்பை பெற்ற நிலையில் இன்று மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் தொடங்கி இருக்கிறது. தமிழகத்தில் முதல் மெகா தடுப்பூசி முகாம் 28 லட்சம் பேரை சென்றடைந்தது. இரண்டாவது மெகா தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேரை சென்றடைந்தது. இந்த நிலையில் தான் மூன்றாவது மெகா தடுப்பூசி முகாம் 15 லட்சம் பேரை இலக்காக கொண்டு இன்று தொடங்கி இருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தடுப்பூசி உபயோகம் 4.36 … Read more

222 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள்: ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவை பெறப்போகும் தமிழகம்

222 Oxygen Generators Will Be Placing Over The Tamilnadu

தமிழகத்தில் 222 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் அமைக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்த நிலையில் அதில் 172 இடங்களில் பணிகள் நிறைவு பெற்று விட்டதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் அறிக்கை விடுத்துள்ளார். மீதி பணிகளும் முடிந்து விட்டால் தமிழகம் ஆக்சிஜன் உற்பத்தியில் தன்னிறைவைப் பெற்றுவிடும் என்றும் தனது அறிக்கையில் கூறி உள்ளார். இரண்டாவது அலையின் போது ஏற்பட்ட ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் தேசத்தில் பல்வேறு உயிர்களை மருத்துவமனையிலேயே துடி துடிக்க வைத்தன. தமிழகமும் அதற்கு விதி விலக்கல்ல. … Read more

அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 40 சதவிகிதமாக அதிகரிப்பு – தமிழக அரசு

Women Reservation Increased To 40 Percentage On Goverment Jobs

தமிழக அரசுப் பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு 30 சதவிகிதத்திலிருந்து, 40 சதவிகிதமாக அதிகரித்து தமிழக சட்டபேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மனிதவள வேளாண்மைத்துறை பிரிவு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தான் வெளியிட்ட அறிக்கையில், அரசுப்பணிகளில் இதுவரை இருந்த 30 சதவிகிதம் மகளிர் இட ஒதுக்கீடு இனிமேல் 40 சதவிகிதமாக உயர்த்தப்படும் என்று தெரிவித்தார். மேலும் அரசுத் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் இனி தமிழ்மொழி பாடத்தாள் கட்டாயம் எனவும் அறிக்கை விடுத்துள்ளார். இது போக … Read more

இனி கடைகளில் நிறுவனங்களில் பணியாளர்களுக்கு இருக்கை கட்டாயம் – தமிழக அரசு

நாள் முழுக்க நின்றே நின்று வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு இனி இருக்கை வசதி கட்டாயம் என்று தமிழக அரசு சட்ட திருத்த வடிவம் ஒன்றை சட்ட பேரவையில் தாக்கல் செய்துள்ளது. தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன் தமிழக சட்ட பேரவையில் ஒரு சட்ட திருத்த மசோதோ ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறி இருப்பதாவது இனி கடைகளில் நிறுவனங்களில் நாள் முழுதும் நின்று கொண்டு வேலை பார்க்கும் பணியாளர்களுக்கு … Read more

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 1,551 பேருக்கு புதியதாக கொரோனோ தொற்று!

தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் புதியதாக தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 1,551-ஆக உள்ளது. மேலும் நேற்றைய ஒரு நாளில் மட்டும் தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 21-ஆக உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் ஒட்டு மொத்த கொரோனோ பலி எண்ணிக்கை 34,856-ஆக உயர்ந்துள்ளது. மாவட்ட வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 230 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. அதற்கு அடுத்ததாக சென்னையில் 182, செங்கல்பட்டில் 122, ஈரோடு மாவட்டத்தில் 115 தொற்றுகள் பதிவாகி உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சகம் … Read more

இனி சட்டப்பேரவையில் புகழ்ச்சியாரம் பேசுபவர்களின் மீது நடவடிக்கை பாயும் – மு க ஸ்டாலின்

சட்டசபையில் ஒரு திட்டமோ அல்லது மசோதாக்களோ நிறைவேற்றுவதற்கு முன் நேரயத்தை விரயமாக்கி புகழ்ச்சியாரம் பேசினால் அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தனது கட்சியை சேர்ந்தவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். பொதுவாகவே எப்போதும் ஒரு ஆளும் தரப்பு சட்டசபைகளில் திட்டங்களை நிறைவேற்றிடும் போதும் அறிவித்திடும் போதும், திட்டம் சம்பந்தமான அறிவிப்புகள் பத்து நிமிடம் பேசப்பட்டால் ஒரு மணிநேரம் ஆவது தங்கள் தரப்பு தலைவர்/தலைவி குறித்த புகழ்ச்சியாரம் இருக்கும். இது விவாதிக்கும் மற்றும் அறிவிப்புகள் நேரத்தை … Read more