பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்று 19.08.2021

பாண்டியன் ஸ்டோர்சில் இன்று ஒரு பக்கம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் திட்டு வாங்கிக் கொண்டு முருகன் பார்வதி வீட்டில் சாப்பிடுகின்றனர். இன்னொரு பக்கம் முல்லை தனத்திடம் தன் வீட்டில் தான் அவர்கள் இருவரும் இருக்கிறார்கள் என்று கூறுகின்றார். குடும்பத்தினர் எவ்வளவு முயற்சி செய்தாலும் கண்ணனை மறக்க முடியாமல் தவிக்கின்றனர். முல்லை கதிரிடம் நடந்ததை கூறுகிறார். ஜீவாவும் கதிரும் பேசிக்கொண்டிருக்கும் பொழுது லக்ஷ்மி அம்மா கண்ணனை தூக்கத்தில் தேடுகிறார்.

ராஜா ராணியில் இன்று – 19.08.2021

பார்வதி சரவணனிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட அதற்கு பிறகு சரவணன் அந்த பாஸ்கரின் வீட்டிற்கு செல்கிறார். அர்ச்சனா எப்படியாவது இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்று பாஸ்கர் வீட்டுக்கு செல்கிறார். ஆனால் எதுவும் முடியவில்லை வீட்டிற்கு வந்த சரவணன் சிவகாமியை மனம் மாற்றி அவரும் திருமணத்திற்கு ஒத்துக் கொள்கிறார்.

நாம் இருவர் நமக்கு இருவர் இன்று – 19.08.2021

மாறனும் மாயனும் மாறி மாறி அன்பை பரிமாறி கொள்ள, வழக்கறிஞர் வீட்டுக்கு வருகிறார். உயிலை சரி பார்த்த அவர் ராஜரத்தினம் எழுதிய படி, மாறனுக்கே 55% சொத்து என மாசாணி, வடிவுக்கு அதிர்ச்சி தருகிறார். பின்னர், மாறனும் மாயனும் அவர்கள் தாய் சாரதாவை பற்றி பேசுகின்றனர்.