விராட் கோஹ்லிக்கு பதில் தயாராகி கொண்டு இருக்கும் தீபக் ஹூடா!

T20 World Cup Deepak Hooda In The Place Of Virat kohli

டி20 உலககோப்பைக்காக விராட் கோஹ்லி இடத்தைப் பிடிக்க தீபக் ஹீடா தயாரகிக் கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சமீப காலமாக விராட் கோஹ்லி தொடர்ந்து எல்லா பார்மட்களிலும் சொதப்பி வருகிறார். அதே சமயக் தீபக் ஹூடா இன்னொரு பக்கம் ஜொலித்து வருகிறார். இதன் காரணமாக நடக்க இருக்கும் டி20 உலக கோப்பை போட்டியில் விராட் கோஹ்லியின் இடத்தை தீபக் ஹீடா பிடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. “ விராட் கோஹ்லி எந்த வீரராலும் … Read more

TATA IPL 2022 | ‘நாங்க தான் கப் அடிக்க போறோம், ஆரவாரம் செய்யும் ஆர்சிபியன்ஸ்’

TATA-IPL-2022-Royal-Challengers-Bangalore

டாடா ஐபிஎல் கடைசி கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் இந்த சீசனில் ஆர்சிபி கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். எப்போதுமே லீக் போட்டிகளில் அந்த அளவுக்கு பெரிதாக அழுத்தம் இருக்காது. ஆனால் இறுதிப்போட்டி என்னும் போது ஒவ்வொரு ப்ளேயர்களின் மீதும் கடும் அழுத்தம் இருக்கும். இந்த அழுத்தத்தை சீனியர் பிளேயர்கள் அதிகமாக இருக்கும் ஆர்சிபி அணியால் எளிதில் எதிர்கொள்ள முடியும். இதனால் ஆர்சிபி கோப்பையை கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக பலரும் கருத்து … Read more

ஐபிஎல் 2022 | ‘மீண்டும் பெங்களுரு அணியின் கேப்டனாகிறாரா விராட் கோலி?’

May Be Virat Kholi Again Taking Captaincy Of RCB

வரும் ஐபிஎல் 2022-யில் ஆர்சிபி அணியை விராட் கோலியே தலைமை ஏற்று நடத்தினால் நன்றாக இருக்கும் அஜித் அகர்கர் கருத்து தெரிவித்து இருக்கிறார். விராட் கோலியை 15 கோடி மதிப்பில் தக்க வைத்து இருக்கும் பெங்களுரு அணி, மீண்டும் விராட் கோலியை தலைமைப் பொறுப்பை ஏற்று அணியை வழி நடத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைப்பதாக தெரிகிறது. கோலி தவிர்த்து மேக்ஸ்வெல் (11 கோடி), சிராஜ் (7 கோடி) என்ற இரு வீரர்களையும் ஆர்சிபி தக்க வைத்து … Read more

டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகினார் விராட் கோலி!

Virat Kohli Stepped Down As Test Captain Of Indian Team

தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்ததை தொடர்ந்து டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகி இருக்கிறார் விராட் கோலி. தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, ஒட்டு மொத்தமாக டெஸ்ட் போட்டியின் தலைமைப் பொறுப்பில் இருந்தும் விலகி இருக்கிறார் விராட் கோலி. திடீரென்று அவர் எடுத்த இந்த முடிவு ரசிகர்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. “ இதன் மூலம் அனைத்து … Read more

விராட் விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர்கள் கேட்ட போது ‘No Comments’ என்று கூறி நழுவி சென்ற கங்குலி!

Ganguly Not Answering For Virat Controversy Questions To Press

விராட் கோலியை தலைமையில் இருந்து நீக்கிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில், இது குறித்து பிசிசிஐயின் தலைமைகளில் ஒருவரான சவுரவ் கங்குலியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்விகளை அடுக்கிஅ போது ‘No Comments’ என்று கூறி பதில் ஏதும் அளிக்காமல் நழுவி சென்று நடையைக் கட்டி இருக்கிறார் கங்குலி. விராட்டை ஒரு நாள் போட்டி தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கியதற்கான காரணத்தை கங்குலி அவர்கள் பத்திரிக்கையாளர்களிடம் விளக்கிய போது, ‘டி20 உலக கோப்பைக்கு பிறகு டி20 கேப்டன்சிப்பில் இருந்து விலகுகிறேன் … Read more

தென் ஆப்பிரிக்க தொடரில் இருந்து விலக இருக்கிறாரா விராட் கோலி?

Virat Kohli Could Himself Unavailable For South Africa Tour Due To Captainship Controversy

முறையற்ற முறையில் ஒரு நாள் போட்டிகளுக்கான தலைமைப் பொறுப்பு விராட் கோலியிடம் இருந்து பறிக்கப்பட்டு ரோஹிட் சர்மாவுக்கு வழங்கப்பட்ட நிலையில், வருகின்ற தென் ஆப்பிரிக்க தொடரில், விராட் கோலி விலக இருப்பதாக நம்பத்தகுந்த கிரிக்கெட் வட்டாரங்கள் தகவல்கள் தெரிவித்து வருகின்றன. டி20 உலக கோப்பைக்கு பிறகு விராட் கோலி டி20 தலைமைப் பொறுப்பில் இருந்து மட்டும் தானாகவே விலகி இருந்தார். இதன் காரணமாக டி20 போட்டிகளுக்கு ரோஹிட் சர்மாவும், ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கு விராட் … Read more

விராட் கோலியை அவமதித்து ரோஹிட் சர்மாவிற்கு வழங்கப்பட்டு இருக்கிறதா தலைமைப் பொறுப்பு?

Is Virat Kohli Forcibly Removed From Captainship

சமீபத்தில் பிசிசிஐ, விராட் கோலியை ஒரு நாள் போட்டிக்கான தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு ரோஹிட் சர்மாவை நியமித்து இருந்தது. சிறிதளவு நன்றி பயனோ அல்லது முறையான அறிக்கையோ இன்றி கோலியை அவமதித்து ரோஹிட்டுக்கு தலைமை பொறுப்பு வழங்கப்பட்டு இருப்பதாக இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர். ஏற்கனவே டி20 தலைமைப் பொறுப்பில் இருந்து விராட் விலகும் போது, பிசிசிஐ கூட்டமைப்பினர் தற்போதைக்கு விலக வேண்டாம் என்று தடுத்ததாகவும், அவ்வளவு தடுத்த போதும் விராட் விலகியதாகவும் … Read more

பெங்களுரு அணிக்காக மட்டுமே கடைசி வரை விளையாடுவேன் – விராட் கோலி

Kohli Wants To Play For RCB Still His Life Time Cricketing

கிரிக்கெட் விளையாடும் வரை, கேப்டனாக இல்லாவிட்டாலும் ஒரு ப்ளேயராக பெங்களுரு அணிக்காக மட்டுமே விளையாடுவேன் என்று கோலி கூறியுள்ளார். நேற்று நடைபெற்ற ஐபிஎல் எலிமினேட்டரில் கொல்கத்தாவுடன் தோற்றதற்கு பின் பேசிய பெங்களுரு அணியின் கேப்டன் விராட் கோலி, இளைஞர்கள் விளையாடுவதற்கு என்னால் முடிந்த அளவுக்கு சுதந்திரம் கொடுத்துள்ளேன். 120 சதவிகிதம் என் உழைப்பையும் அணிக்கு கொடுத்துள்ளேன். என்னுடைய கடைசி விளையாட்டும் பெங்களுரு அணிக்காகத் தான் இருக்கும் என்று உருக்கமாக கூறி உள்ளார். ” இதுவே கோலியை ஐபிஎல்லில் … Read more

’எனக்கு என்னிக்குமே நீ தான் பினிஷர் வாத்தியாரே’ | தோனி குறித்து விராட் போட்ட மாஸ் ட்வீட்!

MSD Fiery Finishing Against Delhi Capital Qualifier 1

நேற்று நடந்த சென்னைக்கும் டெல்லிக்கும் இடையேயான நெஞ்சை பதை பதைக்கும் திரில்லரில் நீண்ட நாட்களுக்கு பிறகு,, தோனி மேட்சை முடித்துக் கொடுத்திருக்கிறார். கடைசி ஓவருக்கு 13 ரன்கள் தேவை தோனி களத்தில். டாம் கர்ரன் வீசிய அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து மேட்சை முடித்து விட்டார் நம் வின்டேஜ் தோனி. 6 பாலுக்கு 18 ரன்கள் அதில் ஒரு சிக்ஸ் மற்றும் 3 போர்கள் அடங்கும். நாம் தல தோனியின் இந்த பினிஷிங்கை எப்படி கொண்டாடினோமோ, … Read more

ஐபிஎல் 2021 | இன்றைய முதல் போட்டியில் பஞ்சாப்பை எதிர்கொள்கிறது பெங்களுரு அணி!

PBKS VS RCB IPL 2021 48th Match Starts Today

ஐபிஎல் 2021-இன் 48 ஆவது போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை எதிர்கொள்ள இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. இன்று நடக்கவிருக்கும் முதல் போட்டியில் கோலி தலைமையிலான பெங்களுரு அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியை எதிர் கொள்ள இருக்கிறது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து நடைபெறும் இந்த போட்டியானது இன்று மாலை 03:30 மணிக்கு நேரடி அலையில் ஒளிபரப்பாகும். இதுவரை இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய 27 போட்டிகளில் 15 போட்டிகளில் பஞ்சாப் அணியே … Read more