ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மஹா காலில் சுளுக்கி இருப்பதால் அவரை தூக்கிக்கொண்டு கோவிலை வலம் வந்தார். அதை பார்த்து கோடீஸ்வரி மற்றும் பாக்கியலட்சுமி இருவரும் ரசித்தார்கள். பின் கோவிலை சுற்றி முடித்து அர்ச்சனை செய்துவிட்டு வீட்டுக்கு கிளம்பினார்கள். அதே நேரம் இவர்கள் கண்ணில் பட்டுவிடகூடாது என்று கோடி அங்கு இருந்து கிளம்பினார். அப்போது கோவில் வாசலில் இருந்த பிச்சைக்காரர்களை பார்த்து பணம் கொடுத்தார். அதற்குள் சூர்யா குடும்பத்தோடு வெளியே வந்தார்கள். இவரை பார்த்ததும் ராஜலக்ஷ்மி கோவத்தில் கத்த ஆரம்பித்தார். நிம்மதியாக கோவிலுக்கு கூட வர முடியவில்லை என்று திட்டினார். மஹா தான் வேண்டும் என்றே அவளது அம்மாவை அழைத்து வர வைத்து இருப்பாள் என்று பழி போட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…