ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா ஓடிப்போய்விட்டாள் ஆனால் அதை வைத்து இந்த திருமணம் தடைபட கூடாது என்று நினைத்தார் சித்ரா. அதனால் சித்ரா மணமேடையில் மஹாவை அமரவைக்க வேண்டும் என்று கூறினார். அதற்கு கோடீஸ்வரியை சம்மதிக்கவும் வைத்தார். மேலும் கோடீஸ்வரி மனதை மாற்றி ஐஷ்வர்யாவுக்கு பதில் மஹாவை அமர கூறினார். ஆனால் மஹா அதற்கு முதலில் ஒத்துக்கொள்ளவில்லை. தன்னால் இப்படி ஒரு காரியத்தை செய்யவே முடியாது என்றார். அதுவும் இந்த திருமணத்துக்கே சூர்யாவை பற்றிய ஒரு நல்ல அபிப்பிராயம் இல்லை , ஆனால் அதற்கும் உனக்காக தான் சமம்தித்து வேலைகள் செய்தேன். ஆனால் இப்போது என்னையே அவரோடு மேடையில் அமர வைப்பது என்ன நியாயம் என்று கேட்டார். ஆனால் மஹா காலில் விழுந்து கடைசியில் அதற்கு மஹா சம்மதிக்கவும் செய்து விட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….