பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, பாக்கியா என்ன செய்யப் போகிறாரோ என இனியா கவலை கொள்கிறார். பாக்கியா நடனம் ஆடுவதை பார்த்து இனிய மட்டுமல்லாமல் பள்ளியில் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். நல்லபடியாக நடனமாடி முடிந்ததும் அடுத்த கட்டத்திற்கு அவர் தேர்வாகிறார்.
அடுத்து கேள்விகள் கேட்கும் கட்டம் என்பதால், இனியா மீண்டும் தன் தாய் தோற்று விடுவார் என வருந்துகிறார் பாக்யாவிடம் குத்தி காண்பித்து பேசுகிறார். பின்னர், பாக்யாவின் முறையில் அம்மா என்றால் எப்படி இருக்க வேண்டும் எனக்கேட்க, அதற்கு அவரும் ஒரு பெரிய விளக்கத்தைக் கூறுகிறார். நமக்குத்தான் இப்படியெல்லாம் கேள்வி நேரத்தில் கேட்பார்களா என்ற சந்தேகம் தோன்றுகிறது. கண்டிப்பாக நீங்கள் வெல்வதற்கு வாய்ப்பிருக்கிறது என இனியா கூற, நடந்தால் பார்க்கலாம் என்று பாக்கியா சொன்னவுடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
மேலும் விவரங்களுக்கு வீடியோவை பார்க்கவும்.