Baakiyalakshmi today episode 01.09.2021 review

பாக்கியலட்சுமி சீரியல் இன்று – 1 செப்டம்பர் 2021 ரிவியூ

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, செல்வி கோபியை ராதிகாவுடன் ஜவுளிக்கடையில் பார்த்ததைப் பற்றி சொல்ல, பாக்கிய அதை நம்ப மறுக்கிறார். செல்வியையும் வசை பாடுகிறார். செல்வி தான் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்கவில்லை, ஆனால், அது கோபி தான் என்று அடித்துக் கூற பாக்கியா நம்பவே மாட்டேன் என கூறுகிறார். இருந்தாலும் பாக்யா மனதில் சந்தேகவிதைகள் விழுந்து விட்டன.

பின்னர், எழில் அமிர்தாவை தன் மனம் தேடுவதை புரிந்து கொள்கிறார். மிகவும் குழப்பமாக காணப்படுகிறார். அடுத்து, முதல் நாள் வேலைக்கு பிறகு ஜெனி வீட்டுக்கு வர, ஈஸ்வரி அவரை கிண்டல் செய்கிறார். ஈஸ்வரியிடம் பாக்யா, ஜெனி ஒரு கோல்டு மெடலிஸ்ட் என கூறுகிறார்.

கடைசியாக, கோபி வீட்டிற்கு வர கோபியின் மேல் சந்தேகம் அதிகரிக்கும் வகையில் சில விஷயங்கள் நடக்கின்றன. செழியன் கோபியின் அலுவலகத்திற்கு சென்ற போது அவர் இல்லை என்றும், இனியா அவரிடமிருந்து வேறு ஒரு வாசனை திரவிய வாடை வருகிறது என்றும் கூறுகிறார்கள். இது பாக்யாவின் சந்தேகத்தை அதிகரிக்கிறது. கடைசியாக கோபியின் அருகே சென்று முகர்ந்து பார்க்க அவரிடம் வேறொரு வாசனை திரவிய வாடை வருகிறது. பாக்யா பெரும் அதிர்ச்சி அடைகிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author