பாரதிகண்ணம்மா சீரியலில் இன்று தலைவலிக்காக மருத்துவரைப் பார்க்கச் செல்லும் கண்ணம்மாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக, அந்த மருத்துவர் கண்ணம்மாவுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்ததை தெரிவிக்கிறார். கண்ணம்மா நம்ப முடியாமல் தவிக்கிறார். பின்னர் நடந்தவை ,எல்லாவற்றையும் யோசித்து சௌந்தர்யாவுக்கு தொலைபேசியில் அழைக்கிறார்.
சௌந்தர்யா விஷயம் அறியாமல் சாதாரணமாக பேச, பின்னர் கண்ணம்மா இந்த கேள்வியை கேட்டதும் அதிர்ச்சி அடைகிறார். அலைபேசி அழைப்பு சரியாக இல்லாதது போல் நடித்துவிட்டு அழைப்பைத் துண்டித்துவிட்டு, பின்னர் வேணுவிடம் சௌந்தர்யா புலம்புகிறார். எட்டு வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை மீண்டும் இருவரும் அசை போடுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்