Bigg Boss Tamil 7 | Day 37 | Review | ‘தொடர்ந்து நீளும் பிரச்சினைகள், முடிவு தான் என்ன? ’

Bigg Boss Tamil 7 Day 37 Tooth Brush Issue Idamporul

Bigg Boss Tamil 7 Day 37 Tooth Brush Issue Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், முப்பத்து ஏழாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

ஹைலைட்ஸ்: விஷ்ணு VS பூர்ணிமா – விசித்ரா, அர்ச்சனா VS பிக்பாஸ் கேங்ஸ் – டூத் பிரஸ் பிரச்சினைகள் – விதி மீறல்

Bigg Boss Tamil 7 Day 37 Vishnu Poornima Argument Idamporul
Bigg Boss Tamil 7 Day 37 Vishnu Poornima Argument Idamporul


விஷ்ணுவின் சுயசிந்தனை சிலசமயங்களில் சரியாக தான் இருக்கிறது. அவர் சர்வைவல் என்பதை இந்த வீட்டில் நன்றாக கற்று வைத்து இருக்கிறார். அவருக்கு இந்த வீட்டின் சரி தவறுகள் நன்றாக தெரிகிறது. ‘நீங்க ஒன்னு பண்ணிட்டு இருக்கீங்க, அது பெரிய Issue ஆக போகுது, அதுக்கெல்லாம் நான் சப்போர்ட் பண்ணிட்டு இருக்க முடியாது, உங்களால முடிஞ்சத பாத்துக்கங்க’ என பூர்ணிமாவிடம் விஷ்ணு கூறியது பூர்ணிமாவை செம்ம காண்டாக்கியது. ’இப்பலாம் விஷ்ணுவ பார்த்தாலே செம்ம எரிச்சலாகுது, செம்ம காண்டாகுது, ரெட் கார்டையும் தூக்கிட்டு அமைதியா Safe கேம் விளையாடிட்டு இருக்காரு’ அப்படின்னு மற்ற ஹவுஸ்மேட்ஸ்கிட்ட பொலம்பிட்டு இருந்தாங்க.

விஷ்ணுவிற்கு வீட்டின் ஹீட் என்ன என்பது நன்றாக தெரிகிறது. மக்கள் எதற்கெல்லாம் ரியாக்ட் செய்வார்கள் என்பதையும் சரியாக புரிந்து வைத்திருக்கிறார். முக்கியமாக எந்த இடத்தில் பேச வேண்டுமோ அந்த இடத்தில் மட்டும் வாயை விடுகிறார். அவர் அவராக இல்லையெனினும் கூட தற்போது கேமை சரியாக புரிந்து கொண்டு அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டு விளையாடுகிறார். நிச்சயம் அது அவர் நீண்ட நாள் இல்லத்தில் தன்னை தக்க வைத்துக் கொள்ள உதவும் என்பதில் ஐயமில்லை.

Bigg Boss Tamil 7 Day 37 Vichu BB Mates Argument Idamporul
Bigg Boss Tamil 7 Day 37 Vichu BB Mates Argument Idamporul

நாமினேசன் அன்று ஆரம்பித்த சண்டைகள் இன்னும் பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. விசித்ரா சார்பில் சொல்லப்படுவது சரியான விவாதம் தான். ‘நீங்களாம் ஒன்னு பன்ணிருக்கீங்க, ஒருத்தனுக்கு ரெட் கார்டு கொடுத்து அனுப்பிரூக்கீங்க, அது சரியா தான் பண்ணீங்களா, அதுக்கான காரணம் வேற ஏதும் இருக்குமா, இத நான் மக்கள் மூலமா தெரிஞ்சிக்கனும்’ இவ்ளோ தான் விசித்ரா சொன்னது. இதற்கு சரி ‘நாங்க பண்ணது சரி தான், ரெட் கார்டு கொடுத்ததும் சரி தான், அதுல நாங்க ஸ்ட்ராங்கா இருக்கிறோம்’ அப்படின்னு சொல்லிட்டு அமைதியா இருந்திருக்கலாம். ஆனால் ட்ரிகர் ஆகி அர்ச்சனா, விசித்ரா, தினேஷ் உள்ளிட்ட போட்டியாளர்களை மொத்தமா டார்கெட் செஞ்சிட்டு இருக்காங்க. ‘குற்றமுள்ள நெஞ்சு தானே குறுகுறுக்கும்’

Bigg Boss Tamil 7 Day 37 Maya Saying Pradeep And Archana As Psycho Idamporul
Bigg Boss Tamil 7 Day 37 Maya Saying Pradeep And Archana As Psycho Idamporul



ஒவ்வொருத்தரும் பேசும் வார்த்தைகள் எல்லாம் எல்லை மீறுகிறது. அர்ச்சனாவை, ’வாடி போடி, நீயெல்லாம் பொம்பளையா, போய் டாக்டர்ட்ட போடி, சைக்கோ, லூசு, கேவலமானவ, F*ucking Idiot’ என வஞ்சகமான வார்த்தைகளை கொட்டி தீர்த்து விட்டு, ஏதோ சீரியஸ்சாக சாரி கேட்பது போல கேட்டு விட்டு அந்த சாரியையும் நகைத்துக் கொண்டு இருந்தனர் பூர்ணிமா, ஐஷூ, ஜோவிகா, மாயா உள்ளிட்டோர். அதுவும் வயதில் மூத்த விசித்ராவிடம், இவர்கள் நடந்து கொள்ளும் விதம் எல்லாம் ஏற்கவே முடியாததாக இருக்கிறது. முக்கியமாக ஐஷூ, ரெஸ்ட் ரூம் அருகே விசித்ரா கலட்டி வைத்து இருந்த செருப்பை எட்டி உதைத்து தள்ளியதையெல்லாம் பார்க்கும் போது, பார்வையாளர்களுக்கே அவ்வளவு கோபம் வருகிறது. அந்த செயலுக்கு பூர்ணிமா, ஜோவிகாவின் நகைப்பும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. மெண்டல் டார்ச்சர் கொடுத்து அர்ச்சனாவை மட்டும் அல்லாது, அவ்வளவு ஸ்ட்ராங்கான விசித்ராவையும் கூட மாயா & கோ அழ வைத்தார்கள்.


Bigg Boss Tamil 7 Day 37 Vichithra Archana Rule Break Idamporul
Bigg Boss Tamil 7 Day 37 Vichithra Archana Rule Break Idamporul


டூத் பிரஷ் என்பது பேசிக்கான ஒரு விஷயம், விசித்ரா முதல் நாள் சாயங்காலம் பொழுதே மாயாவிடம் விசித்ரா கேட்டுக் கொண்டே இருந்தார். ‘எனக்கு தோணும் போது தரேன், காலைல தரேன், குளிச்சிட்டு தரேன், எனக்கு விருப்பம் இருந்தா தர்றேன், டீ போட்டுக் கொடுங்க தர்றேன்’ என மாயா தனது சர்வாதிகாரத்தை திணித்தது விசித்ரா, அர்ச்சனாவை கோபமடைய செய்தது. இருவரும் விதிகளை மீறி ஸ்மால் பாஸ் இல்லத்தை விட்டு கார்டன் ஏரியாவில் வந்து அமர்ந்தனர். அங்கும் கூட்டமாக கூடி அவர்களை புல்லி செய்து, பூர்ணிமா, ஜோவிகா உள்ளிட்டோர் நகைக்க அவர்கள் அந்த இடத்தை விட்டு நகர மறுத்தனர். ‘எங்களுக்கு பிராமிஸ் வேண்டும், நாங்க ஒரு வேலை செய்யனும்னா, எங்கள கூட்டம் கூட்டமாக புல்லி பண்ண கூடாது’ என்ற பிராமிஸ்சை மாயாவிடம் வாங்கிவிட்டு இருவரும் மீண்டும் ஸ்மால் பாஸ் இல்லத்திற்குள் சென்றனர்.

“ இந்த கலகத்தாலும் இவர்களின் பயத்தாலும் ஒன்று மட்டும் புலப்படுகிறது, தவறு செய்து இருக்கிறோம் என்ற பயம் இவர்களின் அனைவரின் முகத்திலும் தெரிகிறது. முக்கியமாக பூர்ணிமாவின் முகம் அதை அப்பட்டமாக காட்டிக் கொடுக்கிறது, இதுவரை நடந்த எல்லா பிரச்சினைகளுக்கும் எந்த தீர்வுமே இன்றளவும் எட்டவில்லை. வீக் எண்ட் எபிசோடில் ஆவது தீர்வு கிடைக்குமா என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “

மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !

About Author