Bigg Boss Tamil 7 | Day 39 | Review | ‘இரண்டு கோர்ட் டாஸ்க்கிலும் சம்பந்தப்பட்டு இரண்டிலும் பல்பு வாங்கிய பூர்ணிமா’

Bigg Boss Tamil 7 Day 39 Bigg Boss Clarification About Vishnu Win In Court Task Idamporul

Bigg Boss Tamil 7 Day 39 Bigg Boss Clarification About Vishnu Win In Court Task Idamporul

பிக்பாஸ் தமிழ் சீசன் 7-யின், முப்பத்து ஒன்பதாம் நாளில் நிகழ்ந்த சுவாரஸ்யமான விஷயங்களை ஒரு தொகுப்பாக இங்கு பார்க்கலாம்.

ஹைலைட்ஸ்: அர்ச்சனா, விஷ்ணு கான்வர்சேஷன் – மாயா, பூர்ணிமா கான்வர்சேஷன் – கோர்ட் டாஸ்க் – விஷ்ணு VS பூர்ணிமா – பூர்ணிமா VS விசித்ரா – ஷாப்பிங் ரீபேமெண்ட் டாஸ்க் – தினேஷ் VS பிக்பாஸ் மேட்ஸ்

Bigg Boss Tamil 7 Day 39 Archana Vishnu About Poornima Maya Idamporul
Bigg Boss Tamil 7 Day 39 Archana Vishnu About Poornima Maya Idamporul

பூர்ணிமா ரெண்டு டைம் கேப்டனா இருந்து இருக்காங்க, மாயா கூடவே தான இருக்காங்க, அவங்க இப்படி அடமெண்டா பண்ணுறத எல்லாம் கேக்கலாம், திருத்தலாம், ஏன் கேக்கலன்னு தெரியல, ஒரு வேள இதுவும் கேமா கூட இருக்கலாம். மாயா அவங்கள அவங்களாவே டவுன் பண்ணிக்கிறத, பூர்ணிமா சைலண்டா ரசிக்கலாம் என விஷ்ணுவும் அர்ச்சனாவும் பேசிக் கொண்டது ஒருவகையில் சரி என்றே பட்டது. காரணம் பூர்ணிமா தன்னுடைய சுயநலத்திற்காக எதையும் செய்யக் கூடியவர் என்பதை தற்போதெல்லாம் உணர முடிகிறது.

Bigg Boss Tamil 7 Day 39 Maya Poornima About Nixen Idamporul
Bigg Boss Tamil 7 Day 39 Maya Poornima About Nixen Idamporul

நிக்ஸனுக்கு அவன் சொன்னது தப்புன்னு பீல் ஆகி இருக்கு, வெளிலையும் இந்த சீன் வச்சு நிறைய மீம் போட்டதா வந்தவங்க சொல்லி இருக்காங்க அவன் கிட்ட, இதுனால அவன் ஒவ்வொருத்தர்ட்டயா போயிட்டு நல்ல பேரு வாங்க நினைக்கிறான், அட்வைஸ் வாங்கிட்டு இருக்கான், அப்ப அவன் சொன்ன அந்த வார்த்தைக்காக அவன் பக்கம் ஸ்டேண்ட் பண்ணி நின்ன நமக்கு என்ன மரியாத?, அவன் சொன்னது தப்புன்னு தெரிஞ்சும் நிக்ஸன் பக்கம் நின்னதே தப்பு. இன்னொன்னு பிரதீப் பண்ணத விட இது ஒன்னும் பெரிய தப்பு இல்லன்னு நிக்ஸன் பண்ண தப்ப, மறைக்கிறதெல்லாம் மாயா தான் பண்ணாங்க. அதுனால புலம்பட்டும் தப்பில்ல.

Bigg Boss Tamil 7 Day 39 Court Task Begins Idamporul
Bigg Boss Tamil 7 Day 39 Court Task Begins Idamporul


கோர்ட் டாஸ்க், இந்த வீட்டில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண வாய்ப்பு, வழக்கை தொடர்ந்தவர்களும், வழக்குக்கு உரித்தானவர்களுமே தங்களுக்கான வாதத்தை முன்வைக்க வேண்டும். வழக்கிற்கான நீதிபதியை வழக்கு போட்டவரும், வழக்கிற்கு உரித்தனவரும் இணைந்து தேர்ந்து எடுக்கலாம்.

Bigg Boss Tamil 7 Day 39 Vishnu VS Poornima Court Task Idamporul
Bigg Boss Tamil 7 Day 39 Vishnu VS Poornima Court Task Idamporul


வழக்கிட்டவர் – விஷ்ணு
குற்றம் சாட்டப்பட்டவர் – பூர்ணிமா
நீதிபதி – ரவீனா


பிரதீப், பூர்ணிமா பார்த்து பண்ண ஒரு கேவலமான கமெண்ட் சொன்னதா சொல்றாங்க, அது என்ன கமெண்ட்னு சரியா தெரில, அதுக்கான சரியான ஆதாரமும் இல்ல. அந்த சிச்சுவேசன்ல, மாயா சிரிச்சதாகவும், அது பத்தி என்ன ஏதுன்னே கேக்கலன்னும், பூர்ணிமா, விஷ்ணு கிட்ட ஆதங்கமா சொன்னாங்களாம். அத வெளிச்சம் போட்டு காட்ட போட்ட விஷ்ணு வழக்கு தொடுத்ததா சொன்னாரு. பூர்ணிமா, மாயா பத்தி பின்னாடி என்னலாம் பேசுறாங்கன்னு மாயா தெரிஞ்சிக்கனும்னு போட்ட வழக்கு மாதிரியும், மாயா – பூர்ணிமா நட்ப எமோசனலோ உடைக்கவும் விஷ்ணு போட்ட வழக்கு மாதிரி தான் ஆடியன்ஸ்சுக்கு புரிஞ்சது.

மாயாவுக்கு வலிக்க கூடாதுன்னு வாழப்பழத்துல ஊசி குத்துற மாறியும், பூசி மொழுகுற மாறியும் மட்டுமே பேசிகிட்டே இருந்த பூர்ணிமாவே, ’ஆமா மாயா சிரிச்சத, பண்ணத, விஷ்ணுகிட்ட, விஷ்ணு சொன்ன மாதிரி ஆதங்கமா தான் சொன்னேன்’ என சொல்ல வழக்கு அங்கேயே முடிந்து விட்டது. அவருக்கு என்ன வேண்டுமோ அதை நீங்களே சொல்லி விட்டீர்கள். நீங்களே ஒத்துக் கொண்டு விட்டீர்கள். வழக்கில் விஷ்ணு வெற்றி பெற்றார் என ரவீனா அறிவித்தார்.

Bigg Boss Tamil 7 Day 39 Poornima VS Vichithra Court Task Idamporul
Bigg Boss Tamil 7 Day 39 Poornima VS Vichithra Court Task Idamporul


வழக்கிட்டவர் – பூர்ணிமா
குற்றம் சாட்டப்பட்டவர் – விசித்ரா
நீதிபதி – நிக்ஸன்


உணவு விஷயத்துல ரிவெஞ்ச் எடுக்கனும் அப்படிங்கிறதுக்காகவே ஷாப்பிங்கிற்காக அர்ச்சனாவை, விசித்ரா அனுப்பி வச்சதாக பூர்ணிமா வழக்கு தொடுத்து இருந்தாங்க.
மொத்தம் இரண்டு பேர் அனுப்பனும் பிக்பாஸ் வீட்ல இருந்து மாயா, ஸ்மால் பாஸ் வீட்ல இருந்து ஒருத்தர, ஸ்மால் பாஸ் இல்லத்துல இருக்கிறவங்களே தான் தேர்ந்தெடுத்து அனுப்பனும். ஸ்மால் பாஸ் இல்லத்துல இருக்கிறவங்களும் வாக்கெடுப்பு ஒன்னு நடத்தி தான் அர்ச்சனாவை அனுப்பியதா அத்துனை பேரும் சொன்னாங்க, அங்கயே பூர்ணிமா தொடுத்த வழக்கு உடைஞ்சு போச்சு, ஒட்டு மொத்த ஸ்மால் பாஸ் இல்லத்தார்களும் எடுத்த முடிவு எப்படி, விசித்ரா ரிவெஞ்ச் எடுத்ததா ஆகும்?, ஆகவே விசித்ரா வழக்கில் ஜெயித்ததாக நிக்ஸன் அறிவித்தார். இரண்டு வழக்கில் சம்மந்தப்பட்டு இரண்டிலும் பல்பு வாங்கி தோற்று போனார் பூர்ணிமா.

Bigg Boss Tamil 7 Day 39 Shopping Repayment Task Maya VS Archana Idamporul
Bigg Boss Tamil 7 Day 39 Shopping Repayment Task Maya VS Archana Idamporul


வாங்கிய பில்லை சம்பந்தப்படுத்தி, ஒரு ஷாப்பிங் ரீ பேமெண்ட் டாஸ்க்கை அறிவித்தார் பிக்பாஸ். இன்னொரு விடயம் என்னவென்றால் ஷாப்பிங் பண்ண அர்ச்சனாவும், மாயாவும் தான் இந்த டாஸ்க்கை விளையாட வேண்டும். பில்லை பலமுறை கேட்டும் ஸ்மால் பாஸ் இல்லத்திற்கு மாயா கொடுக்கவே இல்லை. அதன் காரணத்திற்காகவே பிக்பாஸ் இந்த டாஸ்க்கை வைத்தது போல இருந்தது. ஒரு வேளை டாஸ்க்கில் தோற்கும் பட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுத்து ஜெயிலுக்கு அனுப்ப வேண்டும்.

Bigg Boss Tamil 7 Day 39 Shopping Repayment Task Maya And Archana Idamporul
Bigg Boss Tamil 7 Day 39 Shopping Repayment Task Maya And Archana Idamporul


பில்லை முதலே பார்த்து இருந்தால் அர்ச்சனாவால் ஏதாவது சரியாக பதில் சொல்லி இருக்க முடியும். மனப்பாடம் செய்ய சிறிதே நேரம் இருந்ததால் இருவராலும் சரியாக பதில் அளிக்க முடியவில்லை. ஜெயிலுக்கு ஒருவரை நாமினேசன் செய்ய வேண்டியாதாகிற்று. பிக்பாஸ் இல்லத்தார்கள் இணைந்து விஷ்ணுவை ஜெயிலுக்கு நாமினேசன் செய்ததெல்லாம் காமெடியாக இருந்தது. ‘நீங்க பண்ற தப்புக்கெல்லாம், ஆட்டு மந்தை மாறி உங்க பின்னாடியே வந்துட்டு இருக்க முடியாது, என்ன பண்ணனுமோ பண்ணுங்க, இருக்கு வீக் எண்ட்ல உங்களுக்கெல்லாம் இருக்கு’ என விஷ்ணு காண்டு ஆகி ஜோவிகா, மாயா, பூர்ணிமாவை வறுத்தெடுத்தார்.


” வீக் எண்ட் நெருங்குவதற்குள் கேங் இரண்டாகி, மூன்றாகி கடைசியில் பூர்ணிமாவும் மாயாவும் மட்டும் தனியாக இருக்க வேண்டி வரும் போல. இதில் வேறு ஒவ்வொரு உண்மையாக மாயா போட்டு உடைத்துக் கொண்டு இருக்கிறார். மாயா தனக்கு கீழ் இருப்பவர்களை தான் செய்வதே சரி என்பது போல நம்ப வைத்துக் கொண்டு இருக்கிறார். நிச்சயம் வீக் எண்டில் எல்லாம் உடையும் “


மீண்டும் நாளைய பிக்பாஸ் ரிவ்யூவில் சந்திப்போம். இப்படிக்கு இடம்பொருள் இல்லத்தில் இருந்து உங்கள் லெ. ரமேஷ் !

About Author