ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து கிடப்பதை பார்த்த துரை பிரியாவுக்கு அழைத்து பேசினார். உடனே பிரியாவும் அந்த இடத்துக்கு உடனே சென்றார். துரையிடம் இதை பற்றி எதுவும் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றார் பிரியா. துரையும் அதற்கு சரி என்றார். பின் வீட்டுக்கு ஜீவாவை அழைத்து வந்து அவரை குளிப்பாட்டி சட்டை எடுத்து கொடுத்து தூங்க வைத்தார் பிரியா. காலையில் ஜீவாவை பார்வதி கண்டித்தார். இரவு எதற்காக தாமதமாக வரவேண்டும் என்று கேட்டார். பிரியாவிடம் மன்னிப்பு கேட்க சொன்னார். ஜீவா பிரியாவை பார்த்து பேசினார். நேத்து குடித்து விட்டு வந்ததற்கு மன்னிப்பு கேட்டார். பிரியா இப்படி தினமும் குடிப்பதற்கு என்ன காரணம் என்று கேட்டார். ஆனால் ஜீவா காரணத்தை சொல்ல மறுத்தார். மேலும் பிரியா விடாமல் அவரை காரணத்தை சொல்ல வேண்டும் என்று வற்புறுத்தினார். அதனால் ஜீவா ஒரு பெண்ணை காதலித்தேன் என்று கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்தார் பிரியா . திருமணத்துக்கு முன் நான் இது பற்றி உங்களிடம் கேட்டேன், அப்போது சொல்லாமல் இப்போது சொன்னால் என்ன அர்த்தம் என்று கோவபட்டார். அதற்கு ஜீவா என்ன பதில் சொன்னார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…