ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா அறையில் அவர்களது திருமண போட்டோவை பார்த்து பார்வதியும் அருணாச்சலமும் சந்தோசபட்டார்கள். பிரியாவும் அவர்களை பார்த்து ஆர்வமாக மரியாதியாக பேசினார். பிரியா நடந்தது கொள்வதை பார்த்து இருவருமே மன நிறைவு அடைந்தார்கள். பின் அதே போல் காவ்யா அறையிலும் அவர்களது திருமண போட்டோவை பார்க்க சென்றார்கள். ஆனால் அங்கு காவ்யா அதை திருப்பி மாட்டி இருந்தார். இதனால் மன வெந்தனை அடைந்தார்கள். மேலும் காவ்யாவிடம் இதை பற்றி பேசவும் செய்தார்கள். நீங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ்ந்தால் மட்டுமே நாங்கள் நிம்மதியாக இருப்போம் என்று கூறினார்கள். மேலும் அவர்களது திருமண போட்டோவை திருப்பி வைத்து இனி அந்த ஃபோட்டோ இப்படி தான் இருக்க வேண்டும் எனவும் கூறினார்கள். பின் காவ்யா இந்த அறையில் பார்த்திபன் தங்குவதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறினார். இதை கேட்டதும் பார்வதி மிகவும் சந்தோசமாகா கிளம்பினார். இந்த விஷயத்தை உடனே பார்த்திபன் இடம் கூறினார். இனி நீ தனி அறையில் தூங்க வேண்டாம் கவய உன்னுடன் கூட இருக்க சம்மதம் தெரிவித்து விட்டாள் என்று கூறினார். ஆனால் அது பார்த்திபனால் அதை நம்பவே முடியவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…