Eeramana Rojave 2 Today Episode | 07.07.2022 | Vijaytv
eeramana Rojave 2. 07.07.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவாவுக்கு குலாப் ஜாமூன் செய்து கொடுத்தார் பிரியா. ஜீவா எதுவும் புரியாமல் எதற்கு என்று கேட்டார். உடனே பிரியா இன்று வீட்டில் நடந்ததை கூறினார். பிரியா ஜீவா இருவருக்கும் இன்று ஜாதகம் பார்த்து அதில் 10 பொருத்தமும் அம்சமாக பொருந்தி இருக்கிறது என்று கூறினார். மேலும் இது போல் லட்சத்தில் ஒருவருக்கு தன அமையும் என்று ஜோசியர் கூறியதை பூரிப்புடன் கூறினார். ஆனால் இதில் வருத்தமான விஷயம் பார்த்திபன் காவ்யா இருவருக்கும் பொருத்தமே இல்லை என்று கூறினார். மேலும் அதற்கான பரிகாரம் செய்தால் மட்டுமே அவர்கள் சேர்ந்து வாழ முடியும் என்று கூறினார். ஆனால் காவ்யா இந்த பரிகாரதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று கூறியதால் பார்வதி இந்த பரிகாரத்தை செய்யப் போவதாக கூறினார். அடுத்த நாள் காலையில் பூஜை எல்லாம் செய்து பாதயாத்திரை செல்ல பார்வதி தயார் ஆனார். காவ்யா அந்த பூஜையில் கலந்து கொள்ளவும் விருப்பம் இல்லாமல் இருந்தார். ஆனால் பார்த்திபன் தன் அம்மாவின் நம்பிக்கைக்காக இதை செய்யுமாறு கேட்டுக்கொண்டார். பார்வதி இந்த பரிகாரத்தை செய்து முடிக்க மாட்டார் என்று தேவி மற்றும் மஞ்சுளா நம்பினார்கள். காவ்யா தனக்காக எதற்கு இவளோ கஷ்ட பட வேண்டும் என்று வருந்தினார். குற்ற உணர்ச்சியில் கண் கலங்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…