Eeramana Rojave 2 Today Episode | 07.12.2022 | Vijaytv

eeramana Rojave 2. 07.12.2022

eeramana Rojave 2. 07.12.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா வீட்டில் இருக்கிறாரா என்று பிரியா தேட ஆரம்பித்தார். மேலும் பார்த்திபன் காவ்யா இந்த நேரத்தில் இங்கு சென்றாள்? மொட்டை மாடியில் இருப்பாளோ என்று நினைத்து தேடி வந்தார். ஆனால் அங்கும் அவர் இல்லை. அதனால் அருகில் எதாவது ஒரு தோழி வீட்டுக்கு சென்று இருப்பார் என்று அவரே நினைத்துக்கொண்டார். ஆனால் ஜீவா மற்றும் காவ்யா இருவரும் தெரிந்த கடையில் சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது மழையில் மாட்டிக்கொண்டீர்கள். அப்போது தான் அங்கு அருகில் இருக்கும் ஒரு கோவிலில் அவர்கள் காதலித்த நாட்களில் வந்து வேண்டுதல் வேண்டி இருவரும் கட்டிய கடிதத்தை எடுத்து பார்த்தார்கள். எப்படியும் இந்த வேண்டுதல் நிறைவேறாது என்று கடவுள் முடிவு செய்துவிட்டார் என்று காவ்யா கூறினார். இருந்தும் மலையில் லேசாக நனைந்ததால் அருகில் ஒருவர் குளிர் காய்ந்து கொண்டு இருந்தார். அங்கு சென்று குளிர் காய்ந்து கொண்டு டீ குடித்தார்கள். அதே நேரம் பிரியா ஜீவாவை தேடி மாடிக்கு சென்று பார்த்தார். ஆனால் அங்கு பார்த்திபன் தான் இருந்தார். அவர் காவ்யாவை பற்றி விசாரித்தார். பிரியா ஜீவா பற்றி விசாரித்தார். ஆனால் இருவருக்குமே எந்த தகவலும் கிடைக்கவில்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author