Eeramana Rojave 2 Today Episode | 11.05.2022 | Vijaytv
eeramana Rojave 2. 11.05.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவாவுக்கு அவருக்கு பிடித்த துணிகளை வாங்கி கொடுத்தார் பிரியா. மேலும் ஜீவாவுடன் சாப்பிடவும் செய்தார். அவருக்கு பிடித்த ஐஸ் கிரீம் எல்லாம் வாங்கி கொடுத்தார். இங்கு நடப்பது அனைத்தையும் காவ்யா பார்க்கிறார். அவரால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவரும் ஜீவாவும் காதலிக்கும்போது என்ன நடந்தது என்று யோசித்து பார்த்தார். பின் ஜீவா பிரியா இருவரும் வீட்டுக்கு திரும்பினார்கள். திரும்பியதும் பிரியா தன் மாமனார் மாமியார் இருவருக்கு வாங்கிய துணிகளை எடுத்து கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார். இரவு சாப்பாடு தயார் ஆனது. குடும்பத்தில் அனைவரும் சாப்பிட வந்தார்கள். ஜீவா வேலை விட்டு வந்ததும் சாப்பிட அழைத்தார்கள். மேலும் பார்த்திபன் சாப்பிட வரும்போது காவ்யா இங்கே என்று கேட்டார் பார்வதி. யாருக்கும் காவ்யா இங்கே என்று தெரியாமல் நின்றார்கள். இதனால் அனைவரும் பதட்டம் அடைந்தார்கள். பார்த்திபன் அழைத்து பார்த்தார். ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆகிரிப்பதாக கூறினார். மேலும் பிரியா காவ்யாவின் தோழிகளுக்கு அழைத்து விசாரித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…