ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா இன்னும் வீட்டுக்கு வரவில்லை என்று வீட்டில் அனைவரும் பதரினார்கள். ஆனால் அந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தேவி காவ்யாவை பற்றி தவறாக பேச ஆரம்பித்தார். காவ்யா இந்த வீட்டையும் பார்த்திபனையும் தூக்கி போட்டு ஓடிவிட்டாள் என்று கூறினார். அனல் பார்த்திபன் காவ்யாவை விட்டுக்கொடுக்காமல் பேசினார். பின் காவ்யாவை தேடி அலைந்தார் பார்த்திபன். ஜீவா மற்றும் அவரது மாமா இன்னொரு பக்கம் தேட ஆரம்பித்தார்கள். பின் அர்ஜுன் ஒரு பக்கம் தேடினார். காவ்யா படிக்கும் இடத்துக்கு பார்த்திபன் அடைந்தார். அங்கு இருக்கும் வாட்ச்மேன் இங்கு யாரும் இல்லை, இப்போதுதான் ரவுண்ட்ஸ் போனேன் என்றார். பின் காவ்யாவின் தோழிகளுக்கு அழைத்து விசாரித்தார் பார்த்திபன். அவர்கள் தெரியவில்லை என்றார்கள். மேலும் தகவல் கிடைக்கவில்லை. அதற்குள் காவ்யா வரவே மாட்டாள் என்று முடிவு செய்து தேவி மற்றும் ரம்யா கொண்டாட ஆரம்பித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…