Eeramana Rojave 2 Today Episode | 16.03.2022 | Vijaytv
Eeramana Rojave 2. 16.03.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று,காவ்யா பார்த்திபன் எந்த தவறும் செய்ய வில்லை, அழகர் தான் இத்தனைக்கும் காரணம் என்று வீடியோ ஆதாரம் காட்டினார். பார்த்திபன் பிரியா மற்றும் காவ்யா இருவரையுமே பார்த்து பேசினார். பிரியா தன் மீது வைத்த நம்பிக்கைக்கு நன்றி கூறினார். பின் காவ்யா தனக்காக பேசி இந்த ஆதாரத்தை தகுந்த நேரத்தில் காட்டியதால் அவருக்கும் நன்றி கூறினார். பின் ஜீவா காவ்யாவை பார்த்து, அவரின் மன நிலையை கூறினார். பின் வீட்டில் அனைவரையும் காவ்யா புராணம் பாட வைத்துவிட்டதாக கூறினார். காவ்யா சக்தி இருவரும் துளைந்து போன நகையை தேட ஆரம்பித்தார்கள். அப்போது மஞ்சு அதே போல் ஒரு நகை வைத்து இருந்ததை பார்த்ததாக ஒருவர் சொல்ல அதை அவரிடம் கேட்கலாம் என்று கிளம்பினார் காவ்யா. அவர் கேட்டதை உடனே என்னை திருடியாக சொல்லிவிட்டாள் என்று கத்தினார் மஞ்சு. சின்ன விஷயத்தை பெரிது படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார் காவ்யா. ஆனால் அதை பெரிய பிரச்சனையாக மாற்றினார் மஞ்சு. அடுத்து என்ன நடந்தது? கணோளியை பார்க்க…