Eeramana Rojave 2 Today Episode | 17.05.2022 | Vijaytv
eeramana Rojave 2. 17.05.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் தனியாக நிற்பதை பார்த்த ரம்யா அவருக்கு சூப் வைத்து கொடுத்தார். மேலும் அவரிடம் காவ்யாவை பற்றி மேலும் வெறுப்பு வரும்படி பேசினார். தன்னால் எப்படி பார்த்திபனை விட்டு வேறு யாரையும் நினைக்க முடியாதோ, அதே போல் தான் காவ்யாவும் வேறு எதோ ஒரு ரகசியத்தை வைத்து இருக்கிறாள் என்று கூறினார். ஆனால் பார்த்திபன் தன்னை பற்றி பேசுவது போல் காவ்யாவை பேச உனக்கு உரிமை இல்லை என்று கூறினார். தான் சந்தோசமாக தான் இருக்கிறேன் என்றும் கூறினார். ஆனால் ரம்யா நீ பொய் சொல்லி உன் வாழ்கையை கெடுத்துகொள்ள வேண்டாம் காவ்யாவை விட்டு விலகிவிடு என்று கூறினார். அதே நேரம் காவ்யா படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தவித்தார். எப்படியாவது இன்று பார்த்பன் இடம் விவாகரத்தை பற்றி பேச வேண்டும் என்று முடிவு எடுத்தார். உடனே விவாகரத்து பத்திரத்தை எடுத்து கைஎழுத்து போட்டு பார்த்திபனை பார்க்க கிளம்பினார். அங்கு சென்று பார்த்திபன் இடம் பேச ஆரம்பித்தார். தனக்காக ஒரு உதவி வேண்டும் என்று கேட்டார். பார்த்திபன் தன்னால் என்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்கிறேன் என்று கூறினார். ஆனால் காவ்யா விவாகரத்து பத்திரத்தை கொடுத்து இதில் கை எழுத்து மட்டும் போட்டு கொடுத்தால் போதும் என்றார். இதை கேட்ட பார்த்திபன் அதிர்ச்சி அடைந்தார். உனக்கு இந்த வீட்டில் என்ன குறை? எதற்கு இப்படி ஒரு முடிவு என்று கேட்டார். தனக்கு இந்த வீட்டில் எந்த குறையும் இல்லை, ஆனால் எனக்கு இங்கு மருமகளாக இருக்கவோ, உங்களுக்கு மனைவியாக இருக்கவோ தனக்கு தகுதி இல்லை என்று கூறினார் காவ்யா. அதற்கு பார்த்திபன் என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…