Eeramana Rojave 2 Today Episode | 18.07.2022 | Vijaytv

eeramana Rojave 2. 18.07.2022

eeramana Rojave 2. 18.07.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியாவுக்கு நரேன் மீண்டும் மீண்டும் அழைத்து மிரட்டினான். இதனால் பதட்டமாகவே இருந்தார் பிரியா. ஆனால் யாரிடமும் எதையும் சொல்லவில்லை. மேலும் நரேன் அழைத்து 5 லட்சம் பணத்துடன் அவர் சொல்கிற இடத்துக்கு வந்து சேருமாறு கூறினார். அதையும் பிரியா கேட்டார். உடனே அவன் சொன்ன இடத்துக்கு சென்றார். பிரியாவை அங்கும் இங்கும் என அலைய வைத்து கடைசியில் இருக்கும் இடத்தை கூறினார். குழந்தையும் அங்கு தான் வைத்து இருந்தான். மேலும் பிரியாவை பார்த்ததும் பணத்தை கேட்காமல் தன்னை கல்யாணம் செய்து கொள்ளும்படி கூறினார். இந்த ஊரை விட்டு ஓடி விடலாம் என்று கூறினார். பிரியா எவளவோ தடுத்தும் அவர் அதை கேட்கும் நிலையில் இல்லை. அந்த நேரத்தில் ஜீவா அங்கு வந்தார். வந்து பிரியாவுக்காக சண்டை போட்டு அவரை காப்பதினார். மேலும் அந்த குழந்தையையும் காப்பாற்றினார். பார்த்திபன் ஆபீஸ் கிளம்ப குளிக்க சென்றார். ஆனால் அவரது சட்டை எதுவும் இஸ்திரி போடவில்லை. ஆனால் அவர் குளித்து வந்தவுடன் அவருக்கான சட்டை இஸ்திரி போட்டு தயாராக இருந்தது. ஆனால் அது காவ்யா தான் இதை செய்து இருப்பார் என்று நினைத்து சந்தோசத்தில் துள்ளி குதித்தார். ஆனால் கடைசியில் காவ்யா தான் அதை செய்யவில்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author