ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜேகேவை போலீசார் அரெஸ்ட் செய்தார்கள். இதனால் மனமுடைந்து போன ரம்யா அருணாச்சலத்திடம் அழுது புலம்பி போலீஸ் ஸ்டேஷன் செல்ல கிளம்பினார்கள். அங்கு ஜேகேவை அடித்து உதைத்து துவைத்து அவரை சித்திரவதை செய்து இருந்தார்கள் போலீஸார்கள். மேலும் தேவி தான் இது போல் செய்ய சொன்னார்கள் என்பதும் அவர்களது கருத்து. இதற்கிடையில் அருணாச்சலம் ரம்யா அனைவரும் அட்வகேட்டை கூட்டிக்கொண்டு இங்கே வந்தார்கள். அந்த நிலையிலும் போலீஸார்கள் இவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. ஜேகேவை வெளியே விடவும் இல்லை. இருந்தும் தேவி சொன்ன காரணத்தினால் ஜே கே வை இனிமேல் வெளியே அனுப்ப முடியாது என்பது போல் பேசினார்கள். இதனால் வேறு ஒரு வகையில் பார்த்து நாம் ஜெகேவை வெளியே கொண்டு வர முயற்சி செய்யலாம் என்று கூறினார். இது ஒரு pakkm நடக்க, இன்னொரு பக்கம் காவ்யா ரெகுலர் செக்கப் செய்ய மருத்துவமனைக்கு சென்றார். போன இடத்தில் அவருக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்து இருந்தது. டாக்டர் அவரை பரிசோதனை செய்து அவருக்கு இரட்டை குழந்தைகள் உருவாகி உள்ளது என்று கூறினார். மேலும் இனி வரும்போது உங்களுடன் வேறு ஒரு ஆளை துணைக்கு அழைத்து வர வேண்டும் என்று கூறினார். காவ்யா அதை கேட்டதும் அனந்த கண்ணீரில் மூழ்கினார். இப்படி ஒரு நல்ல விஷயத்தை நம்மளால் முழுமையாக சந்தோஷமும் பட முடியவில்லை. அப்படி ஒரு சூழ்நிலையில் கடவுள் என்னை வைத்து விட்டாரே என்று புலம்பவும் செய்தார். அடுத்து என்ன நடந்தது காணொளியை பார்க்க…