ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, மஞ்சுளா சமைக்கவில்லை, பிரியாவும் சமைக்கவில்லை என்று தெரிந்ததும் வீட்டில் அனைவரும் குழம்பினார்கள். யார் தான் சமைத்தார்கள் என்று கேட்டார்கள். பிரியா இது கண்டிப்பாக காவ்யா சமைத்ததாக தன இருக்க வேண்டும் என்று கூறினார். அதனால் காவ்யாவை அழைத்து கேட்டார்கள். காவ்யாவும் அவர் சமைத்தாதை கூறினார். இதை கேட்ட அருணாச்சலம் மற்றும் பார்வதி அனைவரும் ஆச்சர்ய பட்டார்கள். மேலும் பார்வதி எப்படி மா இவளோ பேருக்கு, ஒரு ஆளாக சமைத்தாய் என்று ஆச்சர்யமாக கேட்டார். பின் காவ்யாவும் தன் அம்மாவிடம் உதவி கேட்டு இதை செய்தேன் என்றார். பின் சற்று நேரத்தில் விருந்துக்கு ஆள் வந்தது. வந்தவர்களை உபசரித்து வரவேற்று விருந்தும் தட புடலாக இருந்தது. வந்தவர்கள் இந்த சமையலை சாப்பிட்டு பாராட்டி தள்ளினார்கள். மேலும் அருணாச்சலம் குடுத்து வைத்தவர் என்றும் கூறினார். பின் விருந்தினரும் கிளம்பினார்கள். ஜீவா தனக்காக தனது ஆதரவிரோருக்காக அறுவதாம் கல்யாணம் நடத்தி வைத்ததால் அவர் மீது இன்னும் மரியாதை கூடியது பிரியாவுக்கு. தன்னை பற்றியும் அக்கறை படுகிறார் என்று சந்தோசம் கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…