ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா மற்றும் பார்த்திபன் இவர்களது நிச்சயம் கோலாகலமாக ஆரம்பித்தார்கள். சக்தி அர்ஜுன் இருப்பதை பார்த்து உடனே காவ்யாவை அழைத்து விஷயத்தை கூறினார். உடனே அந்த பொருக்கியை வெளியில் அனுப்ப வேண்டும் என்று முடிவு செய்து அர்ஜுனை நோக்கி சென்றாள். அருகில் சென்றதும் ஜீவா அர்ஜுன் இடம் பேசிக்கொண்டு இருந்தார். பின் ஜீவாவே இவன் தன எனது தம்பி என்று அறிமுகம் செய்தார். அதே போல், இவர்கள் தான் பிரியாவின் தங்கைகள் என்று அர்ஜுனுக்கு அறிமுகம் செய்தார். அவர்களும் இப்போது தான் அறிமுகம் ஆபவர்கள் போல் நடித்தார்கள். பின் பார்த்திபனை மேடைக்கு அழைத்து வந்து அமர வைத்தார்கள். அதே போல் பிரியாவையும் அலங்காரம் செய்து மேடைக்கு அழைத்து வந்தார்கள். இருவரும் மாலை மாத்திகொண்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…