Eeramana Rojave 2 Today Episode | 23.02.2022 | Vijaytv
eeramana Rojave 2.23.02.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் பிரியாவின் நிச்சயம் நடந்தது முடிந்தது. மாப்பிள்ளையும் பொண்ணும் விருந்து சாப்பிட்டார்கள். அதற்குள் ரம்யா அருணாச்சலத்தை மிரட்டினார் தான் தற்கொலை செய்வதாக. அதனால் பதறிப்போன அருணாச்சலம், உடனே பார்த்திபனை சாப்பாட்டை பாதியில் எழுப்பி பேச வைத்தார். ரம்யாவின் பேச்சை கேட்டு பார்த்திபன் கோவம் கொண்டார். உடனே வீட்டுக்கும் கிளம்பினார். அருணாச்சலம் மண்டபத்தில் இருந்தவர்களிடம் வேலையில் ஒரு சின்ன பிரச்சனை அதை சரி செய்ய சென்றுவிட்டதாக கூறி சமாளித்தார். பிரியாவுக்கு தன்னிடம் சொல்லாம் செல்லும் அளவுக்கு பெரிய பிரச்சினையோ என்று வருந்தினார். காவ்யா ஜீவாவிடம் அவரது அண்ணன் செய்தது பெரிய தவறு என்று கூறினார்.சண்டை போட்டார். அதற்கு ஜீவா எதேதோ சொல்லி சமாளித்தார். பார்த்திபன் ரம்யாவை கதவை திறக்க வைத்தார். அவருக்கு எடுத்து கூறினார். அவரது நிலமையை கூறி புரிய வைத்தார். ஆனால் ரமயாவோ அவரது அம்மா தேவையோ அதை கேட்கும் நிலையில் இல்லை. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…