Eeramana Rojave 2 Today Episode | 23.05.2022 | Vijaytv

eeramana Rojave 2. 23.05.2022

eeramana Rojave 2. 23.05.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பிறந்த நாளுக்காக பார்வதி புடவை வாங்கி கொடுத்து அவரை ஆசிர்வாதம் செய்தார். பிரியாவிடம் ஜீவா தான் இரவு குடித்து விட்டு வந்ததற்கு மன்னிக்குமாறு கேட்டார். ஆனால் பிரியா தன்னை மிகவும் காயப்படுத்தி விட்டதாக கூறினார். பின் பிரியா கிளம்பி பார்வதி கொடுத்த புடவையை கட்டிகொண்டு கீழே சென்றார். அங்கு அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் பிரியாவை ஆசிர்வாதம் செய்தார்கள். வீடு முழுதும் பிறந்த நாள் கொண்டாட்டத்துக்காக alngaarm செய்து இருந்தது. துரை மற்றும் மஹாவும் வந்து கொண்டு இருப்பதாக கூறினார்கள். அப்போது காவ்யா வீட்டில் அலங்காரம் செய்து இருப்பதை கூட பார்க்காமல், யாரையுமே கவனிக்காமல் நேராக ஆட்டோவில் ஏறினார். அப்போது பார்த்திபன் அவரை அழைத்தார். ஆனால் காவ்யா அதை கவனிக்காததால் காவ்யா கையை பிடித்து அழைத்தார். ஆனால் அதை தவறாக புரிந்து கொண்ட காவ்யா பார்த்திபனை திட்டினார். எதற்காக கையை பிடித்து இழுக்க வேண்டும் என்று கேட்டார். பார்த்திபன் அப்போது பிரியாவுக்கு பிறந்த நாள் என்று கூறினார். உன் அம்மா அப்பா எல்லாரும் வருவதால் நீயும் வீட்டில் இருந்தால் தான் நல்லா இருக்கும் என்றார். பின் வீட்டுக்கு திரும்பினார். காவ்யா தனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லவே இல்லையே என்று நினைத்து வருந்தினார் பிரியா. அந்த நேரம் காவ்யா பிரியாவை பார்த்து மன்னிப்பு கேட்டு வாழ்த்தும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author