Eeramana Rojave 2 Today Episode | 24.08.2022 | Vijaytv
eeramana Rojave 2. 24.08.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா ஐஸ் கிரீமை ஒரு கிண்ணியில் வைத்து காவ்யா மற்றும் பார்த்திபன் இருவருக்கும் கொடுத்தார். அதனால் பார்த்திபனும் தானும் காவ்யாவும் எப்படியாவது ஒரே கின்னியில் சாப்பிட போவதாக நினைத்து குதூகலமாக இருந்தார். ஆனால் அவர் நினைத்தது நடக்கவில்லை. காவ்யா தனக்கு எந்த ஐஸ் கிரீமும் வேண்டாம் என்று இருந்தார். பார்த்திபன் தன்னால் முடிந்த வரை முயற்சி செய்து பின் கிளம்பினார். இதற்கிடையில் ரம்யா திடீர் என்று காவ்யாவை பார்த்து மிரட்டுவது போல் பேசினார். உனக்கு பார்த்திபன் மாமாவை பிடிக்காது, வழ மாட்டாய் என்று நினைத்தேன், ஆனால் இந்த வீட்டுக்கு நீ விழுந்து விழுந்து வேலை செய்வதை பார்த்தால் மனம் மாறி பார்த்திபன் உடன் சேர்ந்து வாழ ஆரம்பிப்பது போல் இருக்கிறது என்று கூறினார். மேலும் அந்த எண்ணத்தை இத்தோடு விட்டு விட வேண்டும் என்று கூறினார். அதே போல் பிரியா ஜீவாவுக்கு ஐஸ் கிரீம் கொடுத்தார். அவரும் வாங்க தயங்கினார். ஆனாலும் பிரியா வற்புறுத்தி அவருக்கு ஐஸ் கிரீமை ஊட்டி விட்டார். மேலும் பார்த்திபன் காவ்யா இருவரும் இப்போதன நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ ஆரம்பிக்கிறார்கள் என்று கூறினார். காவ்யா மனம் மாறி பார்த்திபனை ஏற்றுக்கொண்டார் என்றும் கூறினார். அதை கேட்டு ஜீவா வாய் அடைத்து போய் நின்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…