Eeramana Rojave 2 Today Episode | 26.10.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் மந்தில் உள்ள குழப்பங்களை கோவிலுக்கு வந்து தீர்க்கலாம் என்று நினைத்தார். ஆனால் வந்த இடத்தில் பிரியா மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை பார்த்து ஆசுவாசப்படுத்தினார்கள். சற்று நேரத்தில் அதே கோவிலுக்கு மகா வந்து இருந்தார். தன் மகள்கள் பெயரில் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டார். சாமி கும்பிட்டு கிளம்பும்போது அங்கு பிரியாவை பார்த்து பேசினார். அப்போது பிரியா சோர்வாக இருப்பதை பார்த்து பதறினார். என்ன நடந்தது என்று விசாரித்தார். பிரியா தன் மந்திள் இருக்கும் வேதனையை இறக்கி வைத்தார் பிரியா. ஜீவா திருமணத்துக்கு முன் ஒரு பெண்ணை காதலித்ததாக கூறினார். ஆனால் அந்த பெண்ணுக்கு திருமணம் ஆகியும் ஜீவா அந்த பெண்ணை மறக்கவில்லை என்று கூறினார். இதை கேட்டதும் மஹா அதிர்ச்சி அடைந்தார். பிரியாவுக்கு மட்டும் ஜீவா காவ்யா காதலித்தது தெரிந்தால் இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று போய் விடுவாள் என்று பயந்தார். பார்த்திபன் காவ்யாவுக்காக கவிதை எழுதி இருப்பதை காவ்யா பார்த்து படித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author