Eeramana Rojave 2 Today Episode | 29.07.2022 | Vijaytv
eeramana Rojave 2. 29.07.2022
ஈரமான ரோஜாவே தொடரில் இன்று , பிரியாவின் தோழிக்கு நாளை திருமணம் என்பதால் மருதாணி வைத்துக்கொண்டார். அப்போது பார்வதி பிரியாவுக்கு மற்றொரு கையில் அவரே மருதாணி வைத்து விட்டார். பேசி சிரித்து சந்தோசமாக இருந்தார்கள். அதை பார்த்த காவ்யா தனக்கும் இப்படி இருக்க ஆசை தான் ஆனால் அதற்கு குடுத்து வைக்கவில்லை என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார். மேலும் இது போல் மாமியார் கிடைக்க குடுத்து வைக்க வேண்டும் என்று நினைத்தார். பின் பார்வதி அவரது வேலையை பார்க்க கிளம்பினார். அந்த நேரம் பிரியாவுக்கு அழைப்பு வந்தது. ஆனால் அதை எடுக்க முடியாமல் போராடினார். அப்போது ஜீவா அந்த வழியாக சென்றார். இதனால் அவர் பிரியாவுக்கு உதவி செய்தார். ஆனால் ஃபோனில் பிரியாவின் தோழி ஜீவாவை பற்றி விசாரித்தார். எதாவது விசேஷம் உண்டா என்று கேட்டார். மேலும் ஜீவாவை பார்க்க படு ரொமான்டிக் ஆக உள்ளார் என்றும் கூறினார். இதை ஜீவா ஸ்பீக்கரில் இருந்ததால் கேட்டு என்ன சொல்வதென தெரியாமல் இருந்தார். இதே மருதாணியை பார்த்திபன் பார்த்து விட்டு காவ்யாவுக்கு பிடிக்கும் என்று குடுக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அதை பார்வதி தடுக்க முயற்சி செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…
About Author
Auto Amazon Links: No products found.