ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இருவரும் நீதி மன்றத்தில் நின்றார்கள். காவ்யாவிடம் அடுத்தடுத்து கேள்விகள் கேட்டார்கள். உனக்கு ஏன் பார்த்திபனை பிடிக்கவில்லை? வீட்டில் அவர் நடந்துகொள்ளும் விதம் சரி இல்லையா? குடித்து விட்டு உன்னை கொடுமை செய்கிறாரா? வேலைக்கு செல்லவில்லையா? இல்ல உன் மாமனார் மாமியார் கொடுமை செய்கிறார்களா? என்று வரிசையாக கேட்டார். ஆனால் காவ்யா இல்லை இல்லை என்ற பதிலை மட்டுமே கூறினார். பின் நீதிபதி பின் இந்த விவாகரத்துக்கு சரியான ஒரு காரணத்தை சொல்லவேண்டும் என்று கூறினார். ஆனால் காவ்யாவிடம் அதற்கான பதில் இல்லை. மேலும் அவர்களுக்கு திருமணம் ஆகி 6 மாதங்களே ஆனதால் இந்த வழக்கை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். அதனால் மீண்டும் ஒரு 6 மாதம் இருவரும் கணவன் மனைவியாக சேர்ந்து ஒரே வீட்டில் வாழ வேண்டும். அப்படியும் சரி வரவில்லை என்றால் மட்டுமே விவாகரத்து கொடுப்பேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…