Kaatrukkenna Veli today episode 09.09.2021 update

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, தான் தோற்றதை எண்ணி மீனாக்ஷி வேதனையில் இருக்கிறார். மகாதேவன் சாரதாவிடம் நன்றிகளை தெரிவித்து சூர்யாவை காப்பாற்றி விட்டதாக கூறுகிறார். மேலும், மீனாட்சி நிறைய விஷயங்களை முயற்சி செய்வார் எனக் கூறுகிறார்.

பின்னர், சூர்யா வெண்ணிலா வாங்கி கொடுத்த சட்டையை கையில் வைத்துக்கொண்டு காதலாக நினைவுகளை அசை போட்டுக்கொண்டிருக்கிறார்.

Kaatrukkenna Veli video review

வேதனை தாங்க முடியாத மீனாட்சி பொருட்களை போட்டு உடைத்து, பானுவையும் தள்ளிவிடுகிறார். ஒருவழியாக, சூர்யா வந்து மீனாட்சியிடம் தனியாக பேசியதும் மீனாட்சி சற்றே தணிகிறார். சூர்யா சாரதா வந்தது தனக்கும் பிடிக்கவில்லை என குட்டிக்கரணம் அடிக்கிறார்.

கடைசியாக, வெண்ணிலாவும் சாரதாவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நிச்சயதார்த்தம் நின்று போனதை பற்றி சாரதா கூற வெண்ணிலா அதிர்ச்சியடைய இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

மேலும் விபரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author