காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, வெண்ணிலா மீண்டும் கல்லூரிக்கு வரும்வரை எந்த வித புது பாட வேலைகளும் தரமாட்டேன் என சூர்யா கூறுகிறார். காதலோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்.
சௌம்யாவும் மாதவனும் அங்கு வர, மாதவன் சூர்யாவின் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்கிறார். வெண்ணிலா மாதவனிடம் எரிச்சலாக பேச சௌமியா எதுவும் புரியாமல் முழிக்கிறார். பின்னர் அனைவரும் மாறனை சந்திக்கிறார்கள். அந்த நேரத்தில் அங்கு போலீசார் வருகை தந்து மாறனிடமும் வெண்ணிலாவிடவும் கேள்விகள் கேட்கிறார்கள். மாதவன் மேலும் பதட்டம் ஆகிறார்.
கடைசியாக அபியும் ஆனந்தியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். மாறனின் கால் உடைந்தது பற்றி அபி மகிழ்ச்சி அடைகிறார். ரூபா தமிழ் ஆகிய வெண்ணிலாவின் நண்பர்களிடம் நக்கலாகவும் பேசுகிறார். அனைவரும் அபியை சந்தேகப்படுவதோடு எபிசோடு முடிவடைகிறது.