Mahanadhi Serial Today Episode | 08.05.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, சுற்றிப்பார்க்க வந்த ஒரு குடும்பத்தை காவேரி வீட்டுக்கு அழைத்து வந்தார் வசந்த். கமிஷன் கிடைக்கும் என்பதால் இங்க தங்க ஏற்பாடுகளும் செய்ய காவேரியிடம் பேசினார். அந்த நேரம் காய்கறி மளிகை ஜாமன் வாங்க காவேரி கடைக்கு கிளம்பினார். போகும் வழியில் பசுபதியை பார்த்தார். பார்த்த இடத்தில் இருவருக்கும் இடையில் சண்டை வந்தது. பசுபதி அவர் எந்த தவறும் செய்யவில்லை, வீணாக என் மேல் நீ பழி போடுகிறாய் என்று கூறினார். ஆனால் காவேரி கண்டிப்பாக எனது அப்பாவை ஏமாற்றிதான் அந்த தோட்டத்தை அபகரித்தாய் என்று கூறினார். பின் பசுபதி நிவின் காவேரி இருவரும் விளையாடும் வீடியோவை காமித்து என் மகளுக்காக நிவினை பேசி முடித்து உள்ளேன். ஆனால் என் மாப்பிள்ளையை நீ வளைத்து போட நினைக்காதே என்று மிரட்டினார். ஆனால் காவேரி எனக்கு அப்படி செய்ய எந்த அவசியமும் இல்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author