மகாநதி தொடரில் இன்று, குமரன் கொடைக்கானலை எவளவு நேசிக்கிறார் என்று கூறினார். தனக்கு அந்த ஊர் தான் வசிப்பதற்கு தகுந்த இடம், இங்கு சென்னையில் அனலாக இருக்கிறது என்று கூறினார். அதை நிவின் கிண்டல் செய்தார். விளையாட்டாக குமரனை பட்டிக்காட்டான் என்று கூறினார். அதை கங்காவால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் புருஷனை இப்படி பேசுவது பிடிக்கவில்லை. அதுவும் நிவின் உடன் சேர்ந்து காவேரி மற்றும் நர்மதா சிரிப்பதை பொறுக்காமல் தனியாக குமரனை பார்த்து பேசி அழுதார். கொஞ்சமாவது நாகரீகமாக நடந்துகொள்ள வேண்டும் என்று கூறினார். மிகவும் வெகுளியாக இருப்பது நிவின் போன்ற ஆட்கள் இருப்பதால் தான் கிண்டல் செய்கிறார்கள் என்று கூறினார். இதை யோசித்து குமரன் மனம் உடைந்து போனார். தன்னை கங்காவுக்கு பிடிக்கவே இல்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…