மகாநதி தொடரில் இன்று, கங்காவை பெண் பார்க்க வந்தவர் ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தை இருப்பது கேட்டதும் சாரதா அதிர்ச்சி அடைந்தார். மேலும் உடனே குமரன் இடம் சென்று இந்த சூழ்நிலையில் உன்னிடம் கேட்பது தவறு தான். ஆனாலும் எனக்கு வேறு யாரும் இல்லை, நீதான் என் மகளை திருமணம் செய்ய வேண்டும் என்று காலில் விழுந்து கெஞ்சினார். குமரன் நீங்கள் என்ன சொன்னாலும் நான் கேட்பேன் என்று கூறினார். அடுத்து சாரதாவும் வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை வரன் இனி தேவை இல்லை என்றும் கூறினார். இதை கேட்டதும் பசுபதி மீண்டும் பயமுறுத்தினார். இறந்து முறை நிச்சயம் நின்றாள் கங்காவுக்கு நல்ல மாப்பிள்ளை அமையாது என்று கூறினார். ஆனால் அதையும் சாரதா, கங்கா வாழ்க்கை பற்றி நீங்கள் யோசிக்க தேவை இல்லை. என் மருமகன் குமரன் திருமணம் செய்வான் என்று கூறினார். அதை கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். பின் சாந்திக்கு இந்த விஷயம் சென்றது. அவர் உடனே சாரதா வீட்டுக்கு வந்து கத்த ஆரம்பித்தாள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….